Saturday 3 April 2021

ஆசி கந்தராஜாவின் 'கீதையடிநீயெனக்கு’. ஒரு பார்வை

-ரஞ்ஜனி சுப்ரமணியம்-


புகழ் பெற்ற புனைவுகள் அனைத்தின் ஆழத்திலும் அடிநாதமாக ஒலித்துக் கொண்டிருப்பது மானுட வாழ்க்கையின் நிஜ தரிசனங்கள்தான். மீண்டும் வாழ முடியாத தன் கடந்த காலத்தின் நினைவுகளை அல்லது கனவு காணும் எதிர்காலத்தை, இன்னொருவரின் எழுத்தில் காணும் வாசகன், அதில் மனம் ஒன்றிப் போகும் கணங்களின் தாக்கமே அந்தப் புனைவுகளின் வெற்றியாக உருமாற்றம் பெறுகிறது.

இந்தவகையில்  ஆசி கந்தராஜா அவர்களின் 'கீதையடி நீயெனக்குஎன்ற குறுநாவல் தொகுதியானதுபுனைவு நிலை கடந்து வாழ்க்கைப் பதிவுகளின் மீட்டல் என்ற நிலைக்கு உயர்கிறது. தத்துவார்த்தமான சிந்தனையைத் தூண்டும் தலைப்பு படைப்பாளியின் சிறந்த உத்தியாகவும்வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதால் புனைவின் வெற்றிக்கு பலம் சேர்ப்பதாகவும் அமைகிறது. ஆறு சிறந்த குறுநாவல்களை உள்ளடக்கிய இந்நூல் சென்னை 'மித்ராபதிப்பகத்தின் வெளியீடாகும். புகழ் பெற்ற எழுத்தாளர்களான  மாலன்எஸ்.பொ. ஆகியோரது முகவுரைகளால் அணி செய்யப்பட்டும் சிறப்புறுகிறது.