Tuesday, 30 July 2024

 

மகானா நாடக வரலாற்றின் பொற்காலம்.

ஆசி கந்தராஜா.

கோமகளும் குருமகளும்(1968)Kanthasamy, Kohila, Kantharajah


திபர் திரு ஜெயரட்ணம் மற்றும் ஆசிரியர் கவிஞர் கதிரேசர்பிள்ளை ஆகியேரின் காலமே மகாஜனா நாடக வரலாற்றின் பொற்காலம் எனலாம்.

இக்காலத்தில் இலங்கைக் கலைக் கழகம், வருடாவருடம் அகில இலங்கை ரீதியில் நடாத்தி வந்த தமிழ்ப் பாடசாலைகளுக் கிடையேயான நாடகப் போட்டியில் தொடர்ந்து 5 வருடங்களாக மகாஜனா முதலிடம் பெற்றது.

காங்கேயன் சபதம் (1965), ஜீவமணி (1966), அம்பையின் வஞ்சினம் (1967), கோமகளும் குருமகளும்(1968), குரு தட்சனை (1969) என்பனவே வெற்றிபெற்ற 5 நாடகங்கள்.

முதல் நான்கு நாடகங்களிலும் குரும்பசிட்டி கந்தசாமி, ஆசி கந்தராஜா, ஸ்ரீசிவகுமார், வரதா என்னும் வரதாட்ஷனி கந்தையா, நாகேஸ்வரி, தெய்வானை, கோகிலா மகேந்திரன், ஆகியோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார்கள்.

முதல் நான்கு நாடகங்களில் நடித்தவர்கள் பாடசாலையிலிருந்து விலகிய பின் குரு தட்சனை என்னும் நாடகம் (1969) மேடையேறி இலங்கைக் கலைக்கழகப் போட்டியில் முதல்பரிசைப் பெற்றது. இதில் நா. சண்முகலிங்கன், செ சுப்ரமணியம், இந்திரமதி, மாலினி, நடீன், தயாபரன், சுகுணசபேசன் ஆகியோர் நடித்தார்கள்.

நாடக வெற்றிகளுக்கெல்லாம் ஆதார சுருதியாய் பின்னணியில் இருந்து, மற்றவர்கள் தொட்டும்பார்க்காத இதிகாச காப்பியங்களிலே வரும் கிளைக் கதைகளைத் தேடி எடுத்து மேடைக்கதை அமைத்து வசனம் எழுதி நெறியாள்கை செய்து வழிகாட்டியாய்த் திகழ்ந்தது ஆசிரியர், செ. கதிரேசர்பிள்ளை அவர்களே.

மாணவர்களும் மாணவிகளும் ஒன்றாகச் சேர்ந்து நடிப்பதென்பது (காதலன் காதலி, கணவன் மனைவி போன்ற பாத்திரங்களில்) ஏதோ மிகப்பெரிய தப்பென்றிருந்த அந்தக் காலகட்டத்திலேயே மாணவ மாணவிகள் சேர்ந்து நடித்த நாடகங்களை மேடையேற்றி முன்மாதிரியாய்த் திகழ்ந்தது மகாயனாக் கல்லூரியே... 

Tuesday, 2 July 2024

காலச்சுவடு ஜூன் 2024 இதழில், அறியப்பட்ட பெரும் எழுத்தாளர் பெருமாள் முருகன்...


மூன்று டாக்டர்கள்; மூன்று நூல்கள்

2023 ஆகஸ்ட் மாதம் நானும் நண்பர்களும் யாழ்ப்பாணம் போனோம். அங்குப் பருத்தித்துறை சென்று தீவிரப் புத்தக வாசிப்பாளரான குலசிங்கம் அவர்களைச் சந்தித்தோம். அப்பகுதியில் வசிக்கும் டாக்டர் எம்.கே.முருகானந்தன் எங்களைப் பார்க்க வந்தார். அவர் எழுதிய ‘டாக்டரின் தொணதொணப்பு’ என்னும் நூலைக் கொடுத்தார். அவரை அப்போதுதான் முதலில் சந்தித்தேன். நேரம் அதிகம் கிடைக்கும் டாக்டர் போல, ஏதோ புத்தகம் எழுதியிருக்கிறார் என்று சாதாரணமாக நினைத்துவிட்டேன்.