மகாஜனா நாடக வரலாற்றின் பொற்காலம்.
ஆசி கந்தராஜா.
கோமகளும் குருமகளும்(1968)Kanthasamy, Kohila, Kantharajah
அதிபர் திரு ஜெயரட்ணம் மற்றும் ஆசிரியர் கவிஞர்
கதிரேசர்பிள்ளை ஆகியேரின் காலமே மகாஜனா நாடக வரலாற்றின் பொற்காலம் எனலாம்.
இக்காலத்தில் இலங்கைக் கலைக் கழகம், வருடாவருடம் அகில இலங்கை ரீதியில் நடாத்தி வந்த தமிழ்ப் பாடசாலைகளுக் கிடையேயான நாடகப் போட்டியில் தொடர்ந்து 5 வருடங்களாக மகாஜனா முதலிடம் பெற்றது.
காங்கேயன் சபதம் (1965), ஜீவமணி (1966), அம்பையின் வஞ்சினம் (1967), கோமகளும் குருமகளும்(1968), குரு தட்சனை (1969) என்பனவே வெற்றிபெற்ற 5 நாடகங்கள்.
முதல் நான்கு நாடகங்களிலும் குரும்பசிட்டி
கந்தசாமி, ஆசி கந்தராஜா, ஸ்ரீசிவகுமார், வரதா என்னும் வரதாட்ஷனி
கந்தையா, நாகேஸ்வரி, தெய்வானை, கோகிலா மகேந்திரன், ஆகியோர் முக்கிய
பாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார்கள்.
முதல் நான்கு நாடகங்களில்
நடித்தவர்கள் பாடசாலையிலிருந்து விலகிய பின் குரு தட்சனை என்னும்
நாடகம் (1969) மேடையேறி இலங்கைக்
கலைக்கழகப் போட்டியில் முதல்பரிசைப் பெற்றது. இதில் நா. சண்முகலிங்கன், செ சுப்ரமணியம், இந்திரமதி, மாலினி, நடீன், தயாபரன், சுகுணசபேசன் ஆகியோர்
நடித்தார்கள்.
நாடக வெற்றிகளுக்கெல்லாம் ஆதார சுருதியாய்
பின்னணியில் இருந்து, மற்றவர்கள் தொட்டும்பார்க்காத
இதிகாச காப்பியங்களிலே வரும் கிளைக் கதைகளைத் தேடி எடுத்து மேடைக்கதை அமைத்து
வசனம் எழுதி நெறியாள்கை செய்து வழிகாட்டியாய்த் திகழ்ந்தது ஆசிரியர், செ. கதிரேசர்பிள்ளை
அவர்களே.
மாணவர்களும் மாணவிகளும் ஒன்றாகச் சேர்ந்து நடிப்பதென்பது (காதலன் காதலி, கணவன் மனைவி போன்ற பாத்திரங்களில்) ஏதோ மிகப்பெரிய தப்பென்றிருந்த அந்தக் காலகட்டத்திலேயே மாணவ மாணவிகள் சேர்ந்து நடித்த நாடகங்களை மேடையேற்றி முன்மாதிரியாய்த் திகழ்ந்தது மகாயனாக் கல்லூரியே...