Tuesday 5 January 2021

கண்ணைக் குருடாக்கிய மெதைல்

 அல்க்ககோல்.

ண்மைச் சம்பவம்.

ஆய்வு கூட உதவியாளர் ஒருவருக்கு இரவோடு இரவாக, கண்பார்வை போய்விட்டது. நடந்தது இதுதான்! மதுவுக்கு அடிமையான அவர் மதுச்சாலைக்கு மது அருந்தப் போயிருக்கிறார். தொடர்ந்து மது அருந்தப் பணம் போதவில்லை. நேரே தான் பணி புரிந்த ஆய்வு கூடத்துக்கு வந்தவர், மது மயக்கத்தில் ஆய்வுகூடத்தில் எதைல் அல்க்ககோலுக்கு அருகே வைக்கப்பட்டிருந்த மெதைல் அல்க்ககோலை தவறுதலாக எடுத்து அருந்தியிருக்கிறார். காலையில் கண்கள் இரண்டும் குருடாகிவிட்டன.

மெதைல், எதைல் இரண்டும் அல்க்ககோல் மதுக்களே.

நாம் அருந்தும் விஸ்க்கி, பிரண்டி, வொட்கா, சாராயம் அனைத்திலும் எதைல் அல்க்ககோல் 40 – 45 வீதம்வரை கலந்திருக்கும்.

ஆனால் மெதைல் அல்க்ககோல் நஞ்சு, கண்ணைக் குருடாக்கும்.

பத்து வீதமளவில் மெதைல் அல்க்ககோல் கலந்த, எதைல் அல்க்ககோல்தான் கடைகளில் விற்கப்படும் Methylated spirit. இதை விளக்கு எரிக்கப் பாவிப்பார்கள். இதைத்தான் நாம் முன்பு 'பெற்றோல்மாக்ஸ்' கொழுத்தப் பாவித்தோம். சிலர் போதைக்காக, ஏலுமிச்சைச் சாறைக் கலந்து இதைக் குடிப்பார்கள். எலுமிச்சை, மெதைல் அல்க்ககோல் நஞ்சைச் சமப் படுத்தும் என்பது அவர்கள் வாதம். இது அபாயகரமானது.

எதைல் அல்க்ககோல் மதுவை வடிக்கும் போது மெதைல் அல்க்ககோலும், மலிவு விலை மதுவகைகளில் கலந்திருக்க வாய்ப்புண்டு. வடி சாராயம் இதற்கு நல்லதோர் உதாரணம்.

மதுப்பிரியர்களே எச்சரிக்கையாக இருங்கள். விலை அதிகமென்றாலும் நல்லவகையாகப் பார்த்து வாங்குங்கள்.

மெதைல் அல்க்ககோல் - Methyl alcohol CH3OH.

எதைல் அல்க்ககோல் - Ethyl alcohol C2H5OH

No comments:

Post a Comment