ஆசி கந்தராஜாவின் டயறிக்குறிப்பு:
வாழை நடுத் தண்டில் பொரியல், துவையல் செய்வது இந்தியாவில் பிரபல்யம். வயிற்றுக்கு நல்லதென்பார்கள். இதை
இப்போது இலங்கையர்களும் பின்பற்றுகிறார்கள். ஆனால் இலங்கையர்கள் குலைபோட்ட
வாழையின் நடுத்தண்டையே பாவிக்கிறார்கள். இது அதிக பயன்தராது.
இந்தியாவில் பழத்துக்காக மட்டுமல்ல இலைக்காகவும் வாழைகள் வளர்க்கப்படுகின்றன.
தொடர்ந்து இலைகள் அறுக்கப்பட்ட வாழைகள் வீரியமாகக் குலை தள்ளாது. எனவே இவற்றின் நடுத்தண்டே சந்தைக்கு வரும். இதிலேதான் மனித சௌக்கியத்துக்குத்
தேவையான வேதிப்பொருட்கள் அதிகமிருக்கும். குலை தள்ளிய வாழைநடுத்தண்டின் சத்தை, குலை உறிஞ்சிவிட மிகுதி இருப்பது நார்கள் மட்டுமே.
பின் குறிப்பு: வாழைமரம் ஒரு போலித் தண்டு (Pseudo stem). இலைக் காம்புகள் (மடல்கள்)
ஒன்று சேர்ந்த அமைப்பையே நாம் தவறாக வாழை மரம் என்கிறோம். இதற்கு மேலதிகமாக இங்கு அறிவியல் விளக்கம்
வேண்டாம்.
No comments:
Post a Comment