Saturday 8 May 2021

'எரிற்றியர்களும் இலங்கைத் தமிழர்களும்'

-1-

ன்று சனிக்கிழமை. காலை உணவை முடித்ததும், சற்றே உலாத்த வேண்டும் போலத் தோன்றியது. வீதிக்கு வந்தான் முகுந்தன். அது எதியோப்பியாவையும் கென்யாவையும் இணைக்கும் நீண்ட நெடுஞ்சாலை. உலக வங்கியின் உதவித் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்பட்டதாகவும் சாலையின் தூரம், ஆரம்பித்த நிறைவு செய்த தேதிகள், செலவு செய்த தொகை, ஆகிய சகல விபரங்களும் தாங்கிய விளம்பர பலகை யொன்று சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்தது. எதியோப்பியாவின் நெடுஞ்சாலைகளிலும் வீதிகளிலும் இப்படியான விளம்பரப் பலகைகளையும், எயிட்ஸ் விழிப்புணர்வு தட்டிகைகளையும், உதவி வழங்கும் உலக நிறுவனங்கள் அடுத்தடுத்து வைத்திருப்பார்கள்.

முகுந்தன் தங்கி ருந்த ஹோட்டல், நெடுஞ் சாலையைக் கடக்கும் குறுக்கு வீதியில், அந்தக் குறுக்கு வீதியையே முகப்பாகக் கொண்டு அமைந்திருந்தது. நெடுஞ் சாலையில் யப்பானிலிருந்து இறக்குமதியான ஆடம்பர வாகனங்கள்,அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தன. பாதசாரிகள் சர்வசாதாரணமாக, குறுக்கும் நெடுக்குமாக நெடுஞ்சாலையைக் கடந்தார்கள். சந்தியை ஒட்டிய ஓடையில் அழுக்குத் துணிகளுடன் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்த எதியோப்பிய குழந்தைகளை, வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றான் முகுந்தன்.

'ஹலோ சேர்! என்னை ஞாபகம் இருக்கிறதா?' எனக் கேட்டவாறே எதியோப்பிய இளைஞன் ஒருவன், புன்னகைத்தான். கண்ணியமாக உடையணிந்து, அவன் சரளமாக ஆங்கிலம் பேசினான். வேறு மொழிகளும் தெரியும் என்பதைக் காட்ட ஜேர்மன், இத்தாலி மொழிகளிலும் ஆங்கிலத்தில் கூறிய கருத்தைப் பேசிக் காட்டினான்.

'நான்தான் நேற்று இரவு உங்களுக்கு ஹோட்டலில் உணவு பரிமாறினேன். நான் எட்வேட், என்னைத் தெரியவில்லையா? எட்வேட் மெக்கோனன்' எனத் தன் முழுப்பெயரையும் சொன்னான்.

முகுந்தன் தங்கியிருந்த ஹோட்டலில் உணவு பரிமாறுபவர்கள் அனைவரும் பெண்கள். இவன் பொய் பேசுகிறான் என்று தெரிந்தும் அவனைப் பார்த்து புன்னகைத்தான். இவனைப் போன்றவர்கள் ஏமாற்றுப் பேர்வளிகள். இவர்களிடம் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். இருப்பினும் அவனது மொழிப் புலமையும், பல்வேறு மொழிகளைப் பேசிய லாவகமும் அவனைக் கவனிக்க வைத்தன. முகுந்தனின் புன்னகையை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு, வெகு இயல்பாக எதியோப்பிய கலாசாரம் பற்றி முகுந்தனுடன் ஆங்கிலத்தில் பேசினான். கறுப்பை மூடி, லேசாக வெள்ளை நிறம் பூசினால் கலவை நிறம் ஒன்று தோன்றுமே. அத்தகைய ஒரு அரிதான நிறத்தில் அவன் அழகாகத் தோன்றினான். உண்மைதான். எதியோப்பாயர்கள் மிக அழகானவர்கள். ஆபிரிக்க, அராபிய, இந்திய சங்கமத்தில் பல்வேறு மனித சாயல்களை அங்கு காணலாம். எடுப்பான மூக்கும், தொந்தி இல்லாத இறுக்கமான நெடிய உடல்வாகும் ஒருவகைக் கவர்ச்சியை ஏற்படுத்தும். இதன் காரணமாகத்தான் குழந்தைகள் இல்லாத பல ஐரோப்பிய தம்பதிகள், எதியோப்பிய குழந்தைகளைத் தத்தெடுக்க முன்வருகிறார்கள். இந்தத் தத்தெடுப்பு சம்பிரதாயத்துக்காக ஐரோப்பியத் தம்பதிகள் பலர் முகுந்தன் தங்கிய ஹோட்டலிலேயே தங்கியிருந்தார்கள்.

'இன்று சனிக்கிழமை விடுமுறைதானே? கேளிக்கைகள் நிறைந்த உல்லாசக் கிளப்புகள் இங்கு நிறையவே இருக்கின்றன. எதியோப்பிய நடனமும் உண்டு. மார்பை குலுக்கி ஆடும் எதியோப்பிய நடனம், மிகவும் பிரபல்யமானது. போவோமா?' எனக்கேட்டு, எட்வேட் தன் தொழிலில் சிரத்தையாக இருந்தான். இவனைப் போன்றவர்கள், இரவு விடுதிகளாலும், கேளிக்கை விடுதிகளாலும் வாடிக்கையாளர்களை அழைத்து வருவதற்கென கொமிஷன் அடிப்படையில் ஏஜண்டுகளாக அமர்த்தப்பட்டவர்கள். கொஞ்சம் அசமந்தமாக இருந்தாலும் ஏமாற்றக் கூடியவர்கள் என்பதையும், அவர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்வதுதான் தற்பாதுகாப்புக்கான சூத்திரம் என்பதையும் முகுந்தன் முன்னரே அறிந்திருந்தான். இதேவேளை, மிக அவதானமாக நடந்து கொண்டால் நிறையவே தகவல்களையும் புதினங்களையும் அள்ளிக் கொள்ளலாம் எனவும் கேள்விப்பட்டிருக்கிறான். எட்வேட் தன் தொழிலுக்கு புதியவன் என்பதை அவனுடன் பேசிய கொஞ்ச நேரத்திலேயே  முகுந்தன் புரிந்து கொண்டான். கற்றுக்குட்டியான அவனிடம் ஏமாறமாட்டேன் என்கிற நம்பிக்கை முகுந்தனுக்கு ஏற்பட்டது.

'கோப்பி குடிப்போம் வா' என அழைத்தான். எட்வேட்டுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அருகில் இருந்த கோப்பிக்கடை ஒன்றைக் கண்டுபிடித்து அதற்குள் நுழைந்தார்கள். எதியோப்பியாவின் மலைப் பகுதிகளிலே நிறைய கோப்பிச் செடிகள் பயிரிடப்படுகின்றன. அங்கு விளையும் கோப்பி பற்றி எதியோப்பியர்கள் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள். 'எதியோப்பிய ஸ்பெஷல் கோப்பி' என்ற விளம்பரங்களுடன் வீதியோரம் பல கடைகள் வியாபாரம் செய்கின்றன. கண் அசைவால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் எதியோப்பிய அழகிகள் இங்கும் தமது வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருப்பார்கள். காலை வேளைகளில் கோப்பிக் கடையில் கூட்டம் அதிகம் இருப்பதில்லை. கோப்பிக்கடையின் மூலையொன்றில் அவர்கள் வசதியாக அமர்ந்துகொண்டார்கள். கேளிக்கை விடுதியொன்றுக்கு முகுந்தன் செல்லாத ஏமாற்றம் அவன் முகத்தில் தெரிந்தது. அன்றைய சீவியம், அவனுக்கு கிடைக்கும் கொமிஷனில் தான் தங்கியுள்ளது. முகுந்தனிடம் எந்தவித பிரயோசனமும் இல்லை என்றெண்ணிக் கழற்றிவிட எத்தனித்தான்.

ஆயிரம் Birr (எதியோப்பிய பணம்) எடுத்து, 'இதை வைத்துக் கொள்' எனக் கொடுத்தான் முகுந்தன்.

'சேர்!' என ஏதொ சொல்ல அவதிப்பட்டான். வார்த்தைகள் அவன் தொண்டையில் அடைத்துக்கொண்டன. ஒருவகைத் திணறல். அவனுடைய செயலுக்கான காரணம் முகுந்தனுக்குப் புரிந்தது. முகுந்தன் கொடுத்த பணம் அவனது ஒருவார ஊதியம். டொலரிலே செலவு செய்து பழகிய முகுந்தனுக்கு அது பெரிய தொகையல்ல.

'உண்மையாகவே இந்தப் பணம் எனக்கா? கேளிக்கை விடுதிக்கும் வரமாட்டேன் என்கிறீர்களே?' என ஒருவித சந்தேகத்துடன் ராகம் இழுத்தான்.

'உனக்குத்தான், உன்னுடன் சாவகாசமாகப் பேச வேண்டும். எடுத்துக்கொள்' என்றான் முகுந்தன்.

-2-

தியோப்பிய மலைப் பிரதேசத்தின், எரிற்றியா எல்லையில் அமைந்த கிராமம் அது. மிகவும் அழகான கிராமம். அங்குதான் எட்வேட் பிறந்து வளர்ந்தவன். இருப்பினும், படித்ததெல்லாம் கிராமத்தை ஒட்டிய Axum என்ற நகரத்தில். கிறீஸ்தவ மிஷனரி பாடசாலையொன்றில் சரித்திரம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை முதன்மைப் பாடங்களாகவும் பிரென்ஞ், ஜேர்மன், லற்றின் ஆகிய மொழிகளைத் துணைப் பாடங்களாகவும் கற்றதாகச் சொன்னான்.

சரித்திரரீதியாக, எதியோப்பியா அபிசீனியா(Abyssinia) என்று அழைக்கப்பட்டது. அண்டை நாடான எரிற்றியாவை இத்தாலியர் தமது குடியேற்ற நாடாக்கினர். அங்கிருந்து எதியோப்பியாவை இணைத்துக் கொள்ள இத்தாலி முயன்றது. இவை பற்றிய பூரண எதியோப்பிய வரலாற்று அறிவு, அவனுக்கு இருந்ததை அவனுடன் பேசிய குறுகிய நேரத்தில் முகுந்தன் தெரிந்துகொண்டான்.

எரிற்றியா தனிநாடாவதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ, அவை அனைத்தும், இலங்கை ஈழப் பிரச்சனையிலும் உண்டு. எதியோப்பிய புத்திசாலி இளைஞன் ஒருவன் இதை எப்படிப் பார்க்கிறான் என்பதை தெரிந்துகொள்ளவே அவனிடம் முகுந்தன் பேசிக் கொண்டிருந்தான். இல்லையேல் விலைமாதர்களுக்கு வாடிக்கை பிடிக்கும் ஒரு ஏஜெண்டிற்கு ஆயிரம் Birr பணத்தை விட்டெறிந்திருக்க மாட்டான்.

எதியோப்பியாவில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழி Amharic. இதுவே எதியோப்பிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழி. எரிற்றியாவில் Tigrinya என்கிற மொழியே பொதுவழக்கில் உண்டு. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இத்தாலிய ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்த எரிற்றியா, இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின், பிரித்தானியர்களின் நிர்வாகத்துக்குரிய நிலப்பரப்பாக்கப்பட்டது.

இலங்கையின் தமிழப் பகுதிகள் எவ்வாறு 1832ம் ஆண்டு பிரித்தானியரின் நிர்வாக வசதிக்காக, சிங்கள பகுதிகளுடன் இணைக்கப்பட்டனவோ, அவ்வாறே ஆட்சி வசதிக்காக 1952ம் ஆண்டு பிரித்தானியர்களால் எரிற்றியாவும் எதியோப்பியாவும் ஒரே நாடாக இணைக்கப்பட்டன. இது எண்ணையையும் தண்ணியையும் கலக்கும் விவகாரத்துக்கு நல்லதோர் உதாரணம்.

எரிற்றிய மக்கள் எதியோப்பிய தேசியத்தில் கரைந்து போகத் தயாராக இல்லை. இதனால் இனப்போர் எழுந்தது. இரண்டு பக்கமும் உயிர் சேதம் பெருகியது. எட்வேட் பிறந்து வளர்ந்த, எரிற்றிய எல்லையோர மலைப் பிரதேசத்தில் கிளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டப் பட்டதாக முகுந்தன் ஊடகங்களில் வாசித்திருக்கிறான். இதுபற்றி அவனிடம் கேட்டான்.

சிறிது நேரம் மௌனமாக இருந்தவன் தன் முன்னே மேசையில் இருந்த கோப்பியை ஒரே மடக்கில் குடித்த பின்னர் பேசத்துவங்கினான்.

'எரிற்றியாவில் இருந்து கொண்டே, எதியோப்பியாவை அடிமைப்படுத்த இத்தாலி முயன்றது. காடுகளும் தொடர் மலைகளும் நிறைந்துள்ள எதியோப்பியாவில் மலை வாழ்க்கைக்கு நன்கு பழக்கப்பட்ட எதியோப்பிய அரசனையும், வில்லும் அம்பும் ஏந்திய அவரது படையையும் வெல்ல முடியவில்லை. 1936ம் ஆண்டு தொடக்கம் 1941ம் ஆண்டு வரை, இத்தாலிய ஆதிக்கம் எதியோப்பியாவின் சில பிரதேசங்களில் இருந்த போதிலும், எதியோப்பியா யாருக்கும் என்றுமே அடிமைப்பட்ட நாடாக இருந்ததில்லை. என் தந்தை வழிப்பாட்டனார் இத்தாலியர்களுடன் தீரமுடன் போர் புரிந்து மாண்டதாக என் தந்தை கூறுவார்.'

இதனைக் கூறியபோது எட்வேட் பெருமிதமடைந்தான். அது நியாயமானதும் கூட.

'உன் தந்தை இப்போதும் நீ பிறந்த கிராமத்தில்தான் இருக்கிறாரா?'

'இல்லை, அவர் கொல்லப்பட்டு விட்டார்.' என்றவன் சில விநாடி மௌனத்தின் பின் மீண்டும் தொடர்ந்தான்.

'இத்தாலிய ஆதிக்கத்ததுக்கு எதிராக எதியோப்பியர்கள் தீரமுடன் போரிட்டார்கள். இங்கேதான் பிரித்தானியர்கள் வழமை போல தங்கள் மூக்கை நுழைத்துக் கொண்டார்கள். எதியோப்பிய வீரர்களுக்கு உதவுகிறேன் பேர்வழி எனக்கூறிக் கொண்டு, போரில் இத்தாலியர்களை வெற்றிகொண்டு இரு நாடுகளையும் இணைத்தார்கள்'

'அங்கேதான் பாரிய வரலாற்றுத் தவறு ஏற்பட்டது' எனப் புத்தகங்களிலே படித்த ஞானத்தை முகுந்தன் அவிழ்க்கத் துவங்கிய பொழுது சைகை மூலம் நிறுத்தி, அவன் தொடர்ந்தான்.

'நீங்கள் சொல்வது உண்மைதான். இத்தாலியர்களை வெளியேற்றுவதில் எதியோப்பியர்களும் எரிற்றியர்களும் சேர்ந்தே போரிட்டார்கள். பிரித்தானியர்களால் இரு நாடுகளும் இணைக்கப்பட்ட பின், எதியோப்பியர்களின் ஆதிக்கம் மேலோங்க, எதியோப்பியர்களுக்கும் எரிற்றியர்களுக்கும் இடையில் போர் எழுந்தது'

'இதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லு. இதே நிலைமை தான் எனது தாய் நாடாகிய ஸ்ரீலங்காவிலும் நடந்தது. என் மூதாதையர் வாழ்ந்த தமிழ்ப் பிரதேசத்தைச் சிங்கள நாட்டுடன் இணைத்த ஆங்கிலேயர், சிங்கள இனத்தின் மேலாதிக்கத்திற்கு வழிவகுத்தார்கள்' என்றான் முகுந்தன்.

'உங்கள் நாட்டுப் பிரச்சனைபற்றி நான் படித்த மிஷன் பாடசாலையில் மதபோதகர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். சிங்களம் அங்கு அரச மொழியாக்கப்பட்டது போலவே, இங்கும் இணைக்கப்பட்ட இரண்டு நாட்டுக்கும் எதியோப்பிய மொழியாகிய Amharic பொது மொழியாக பிரகடனப் படுத்தப்பட்டது.'

'எதியோப்பியாவுடன் ஒப்பிடும்போது எரிற்றியா பரப்பளவில் மட்டுமல்ல, மக்கள் தொகையிலும் மூன்றில் ஒரு பகுதிக்கும் குறைவானது. எரிற்றியர்களின் மொழி, கலாசாரம் ஆகியன எதியோப்பியர்களிலும் பார்க்க முற்றிலும் வேறுபட்டன. செயற்கையான அரசியல் இணைப்பு ஓர் இனத்துக்கு இழைக்கப்படும் அநீதியல்லவா? கொதிக்கும் எண்ணைக் கொப்பரையிலிருந்து தப்புவதற்கு நெருப்பில் குதித்த கதை போல, இத்தாலியர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு எதியோப்பியரின் ஆதிக்கத்திற்குள் சிக்கி, எரிற்றியர்கள் விழித்தார்கள்' என்றான், முகுந்தன். இதைச் சொல்லும்பொழுது இலங்கைத் தமிழரின் நிலையை நினைவு படுத்திக் கொண்டதால் உணர்ச்சி வசப்பட்டான்.

'நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். எரிற்றியர்களால் மொழித் திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எரிற்றிய மக்கள் Amharic மொழியைப் பேசவும் பயிலவும் மறுத்தார்கள். இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட கிளர்ச்சியில், 1993ம் ஆண்டு 'எரிற்றிய மக்கள் விடுதலை இயக்கம்' எரிற்றியாவை தன்னிச்சையாகத் தனிநாடாகப் பிரகடனப் படுத்திக் கொண்டது'

'அந்த வரலாற்றைக் கொஞ்சம் விபரமாகச் சொல்லேன்' என ஆவலுடன் கேட்டான் முகுந்தன்.

'1974ஆம் ஆண்டில் எதியோப்பியாவில் சோவியத் சார்புடைய கம்மியூனிச சித்தாந்தத்திற்கு ஆதரவானவர்களுடைய கையோங்கி, இராணுவப் புரட்சி மூலம் சோவியத் யூனியனுக்கு விசுவாசம் தெரிவித்த இராணுவம் ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றியது'.

'உலகில் பழமைவாய்ந்த கிறிஸ்தவ மதத்தை ஏற்றிருந்த எதியோப்பிய மக்களால், கம்யூனிச சித்தாந்தங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் 'எதியோப்பிய மக்கள் புரட்சிகர இயக்கம்' எதியோப்பியாவில் தோன்றியது. எதிரிக்கு எதிரி நண்பன் அல்லவா? எரிற்றிய விடுதலைக்குப் போராடிய, எரிற்றிய மக்கள் விடுதலை இயக்கத்துடன் கம்யூனிச இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட ஆரம்பிக்கப்பட்ட, எதியோப்பிய மக்கள் புரட்சிகர இயக்கம் சேர்ந்து கொண்டது'

இந்த இடத்தில் எட்வேட் ஒரு முத்தாய்ப்பு வைத்தான். ஏன் பேச்சை நிறுத்தி எழுந்தான் என்பது விளங்கவில்லை. சிரித்தவாறே சங்கடத்துடன் சிறுநீர் கழித்து வருவதாகக் கூறிச் சென்றான்.

எதியோப்பிய மக்கள் விடுதலை இயக்கம் போன்றே இலங்கையிலும், ஜே.வி.பி. என்கிற மக்கள் விடுதலை முன்னணி, சிங்கள விடுதலைக்கென்று ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இனவாத சக்தியாக வளர்ந்திருப்பதை நினைவுபடுத்திக் கொண்டான் முகுந்தன்.

எட்வேட் ஒரு சிகரெட்டை பற்ற வைத்த வண்ணம் மீண்டும் வந்தமர்ந்தான்.

'இரண்டு இயக்கங்களும் சோவியத் சார்புடைய இராணுவ ஆட்சிக்கு எதிராக போர் புரிந்தார்கள். மிகுதியைச் சொல்லு' என விட்ட இடத்தை நினைவுபடுத்தி, முகுந்தன் அடி எடுத்துக் கொடுத்தான்.

'சோவியத் சார்பு இராணுவ ஆட்சி, சர்வதேச முதலாளித்துவத்துக்குத் தோதுப்படவில்லை. முதலாளித்துவ நாடுகள், இரண்டு விடுதலை அமைப்புகளும் இணைந்து போராடுவதை சாத்தியப்படுத்துவதில் வெற்றிபெற்றன. இதனால் சோவியத் சார்பு ஆட்சி வீழ்ந்தது. இந்த போட்டத்தின் தொடர்ச்சியாக, எரிற்றியர்கள் 1993ம் ஆண்டு எரிற்றியாவை தனிநாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்கள்' என்றான்.

அந்த நிகழ்ச்சிகளை அசைபோடுபனைப் போல் எட்வேட் மௌனம் சாதித்தான்.

'இந்தப் பிரிவினைப் பிரகடனத்திற்குப் பின்னர் அமைதி நிலவியதா?' எனக் கொக்கி போட்டு அவனை மீண்டும் சம்பாஷனைக்குள் இழுத்தான் முகுந்தன்.

'அதுதான் இல்லை. 1998ம் ஆண்டு மீண்டும் எதியோப்பிய, எரிற்றிய எல்லைப் பிரச்சினை துவங்கியது. அந்தக் கிளர்ச்சியில்தான் என் தந்தை படுகொலை செய்யப்பட்டார். எரிற்றிய எல்லையில், எதியோப்பியாவுக்குள், எரிற்றியர்கள் கணிசமான அளவில் வாழ்ந்தார்கள். அவர்கள் அனைவரும் இரவோடு இரவாக உடுத்த உடுப்புடன் எரிற்றியாவுக்குத் துரத்தப்பட்டார்கள். அவர்களுள் என் காதலியும் ஒருத்தி. அவளை இன்னும் நான் மனப்பூர்வமாகக் காதலிக்கிறேன். அவளை இனிப் பார்ப்பது சாத்தியமாகுமென நான் நினைக்கவில்லை' என்றான் பரிதாபமாக.

'உன் தாயார் எங்கிருக்கிறார்? உனக்கு சகோதரர்கள் இல்லையா?'

ஏனைய உறவுகளை நினைவுபடுத்தல், காதலியை மறப்பதற்கான வடிகாலாய் அமைதல் கூடுமென்கிற எண்ணத்தினாலும் அதைக் கேட்டான்.

'தொழில் நிமிர்த்தம் என் தாய், எரிற்றியாவில் இருந்து எதியோப்பியாவின் எல்லையோரம் உள்ள Axum நகரத்துக்குக் குடிபெயர்ந்ததாக அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் ஒரு மருத்துவத் தாதி. என் தந்தை இத்தாலியில் பயிற்சி பெற்ற பிரபல மருத்துவர். என் தந்தையின் தாதியாகப் பணிபுரிந்த போது இருவரும் காதலித்து மணம் முடித்துக் கொண்டார்களாம்.

இந்தக் தகவல்களை கூறியபின், எட்வேட் தன் இரு கைகளாலும் முகத்தை பொத்தியவாறு மௌனமாக இருந்தான். பின்னர் மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து, தன்னைச் சுதாகரித்துக் கொண்டான்.

அவன் கதை தொடர்ந்தது.

'கிளர்ச்சியாளர்களுக்கு மருத்துவ உதவி புரிந்ததாக குற்றம் சாட்டி, சோவியத் சார்பு எதியோப்பிய இராணுவம், என் தந்தையை சிறையில் அடைத்தது. பல மாதங்களின் பின்னர் அவர் அங்கேயே கொல்லப்பட்டதாகத் தகவல் வந்தது. தந்தையை கொலை செய்த ஆத்திரத்தில் எனது தாய் எரிற்றிய மக்கள் விடுதலை இயக்கத்துக்குத் தாதியாக பணிபுரிந்திருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ஓர் இரவு இராணுவம் என் தாயையும், அவருடன் வசித்த அனைவரையும் அவர்களுடைய வீட்டிலேயே சுட்டுக் கொன்றது. நான் மிஷனரி பாடசாலையின் விடுதியில் தங்கியிருந்ததால் தப்பிப் பிழைத்தேன். அதன்பின் எங்கெல்லாமோ சுற்றித் திரிந்து இப்போது அடிசபாபாவில் வாழ்கிறேன். நான் படிக்க வேண்டும், அதற்கு பணம் வேண்டும். அதற்காகத்தான் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளேன்' என்றவன் சிகரெட்டை வெறுப்புடன் நூர்த்து எறிந்தான்.

அந்த நேரத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் நாமிருந்த கோப்பிக் கடைக்குள் நுழைந்து, எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு பிரசுரத்தை விநியோகித்தார்கள். உணவு விடுதிகள், கேளிக்கை நிலையங்கள் எனப் பொது இடங்களில் அடிக்கடி இவர்கள் இத்தகைய பிரசாரங்களில் ஈடுபடுவார்கள். இதற்கு ஐக்கிய நாடுகள் சபை உலக வங்கியூடாக பெருந்தொகை பணத்தைச் செலவு செய்கிறது. இருப்பினும் எயிட்ஸ் நோய், எதியோப்பிய சௌக்கியத்துக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது. எட்வேட் துண்டு பிரசுரத்தை வாங்கவில்லை. வேண்டாம் என சைகை மூலம் தெரிவித்தான். அதிதீவிர பிரசாரத்தினால் ஏற்படச் சலிப்பாகக்கூட இருக்கலாம்.

நீ ஒரு வைத்திய பரம்பரையில் பிறந்து வளர்ந்தவன். எயிட்ஸ் இங்கு பாரிய பிரச்சனை என்பது உனக்குத் தெரியும். இருப்பினும் கேளிக்கை விடுதிக்கு ஆட்களைக் கூட்டிச் செல்வது தவறாக தெரியவில்லையா?'

'தவறுதான். எனக்கு வேறு வழி தெரியவில்லை. என் கனவு, சரித்திர பாடத்தில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்று ஒரு பேராசிரியராக வேண்டுமென்பதே. அதற்குப் பணம் வேண்டும். முன்பின் தெரியாத, எனக்கென யாருமற்ற இந்த அடிசபாபா நகரத்திலே, அன்றாடம் உயிர் வாழ்வதே ஒரு போராட்டமாக உள்ளது. போரின் தாக்கத்தினால் நல்லொழுக்க விதிகள் செத்துவிடுகின்றன....'

'உனக்குத்தான் பல மொழிகள் தெரிகிறதே. இந்தத் தகைமையை வைத்து நல்ல வேலை என்று தேடிக்கொள்ள முடியாதா?’

‘Sir, நீங்கள் வாழும் உலகம் வேறு. ஆபிரிக்கா வேறு. இங்கு வேலை எடுப்பதானால் 'சிபார்சு' வேண்டும். யாராவது பிணை நிற்கவேண்டும். முன்பின் தெரியாத இந்த நகரத்தில் எனக்கு பிணை கொடுக்க யார் வருவார்கள், நான் பார்ப்பது நியாயமான தொழிலல்ல என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ருப்பினும் எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றான் எட்வேட்.

மதியம் தாண்டிவிட்டது என்பதை சடுதியாக உணர்ந்தான் முகுந்தன். பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் அவனை மதிய உணவுக்கு அழைத்திருந்தார். பல்கலைக்கழகத்தினர் தனியோர் உலகில் வாழப் பழகிக் கொண்டவர்கள். அது புத்திஜீவித உலகம் என அவர்கள் கற்பனை செய்து வைத்திருக்கும் உலகம். அவர்கள் எதியோப்பியாவின் மறுபக்க வாழ்க்கை ஒன்று இல்லாததுபோல நடித்தார்கள். எட்வேட் பேசிய பல விஷயங்கள் உண்மையானவை என்பதை அவன் உடல்மொழியும் கண்களும் சொல்லின. மேலும் ஒரு கணிசமான தொகையை அவனுக்குக் கொடுத்து நன்றி சொல்லி, பேராசிரியரியரின் விருந்துக்குச் செல்ல முகுந்தன் விடைபெற்றான்.

முகுந்தன், தனது எதியோப்பிய அநுபவங்கள் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொண்டபோது, எரிற்றியா குறித்து அழுத்தம் கொடுத்தமைக்கு காணம் உண்டு. 1993ஆம் ஆண்டு மே மாதம் எதியோப்பியாவில் இருந்து பிரிந்து எரிற்றியா சுதந்திரம் பெற்றது. இதன் மூலம் பிரித்தானியர் செய்த பிழைகள் நேர் செய்யப்பட்டு, எரிற்றிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டது.

 சமீபத்தில் (March 2021), இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில், இலங்கை அரசுக்கு எதிராக, ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அத்தீர்மானத்துக்கு எதிராக, (இலங்கைக்கு ஆதரவாக) எரிற்றியா வாக்களித்ததைப் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இது பல மட்டங்களிலும் விவாதத்துக்குரிய பொருளாயிற்று. எரிற்றிய மக்களுக்கு இருந்த இனப்பிரச்சனைக்கும், இலங்கையில் தமிழ் சிங்கள இனங்களுக்கிடையே, இன்னமும் தீர்க்கப்படாது இருக்கும் இனப் பிரச்சனைக்கும், காரணிகள் ஒன்றே. இரண்டுக்கும் நிறைய ஒருமைப்பாடு உண்டு.

 ன்று சனிக்கிழமை. காலை உணவை முடித்ததும், சற்றே உலாத்த வேண்டும் போலத் தோன்றியது. வீதிக்கு வந்தான் முகுந்தன். அது எதியோப்பியாவையும் கென்யாவையும் இணைக்கும் நீண்ட நெடுஞ்சாலை. உலக வங்கியின் உதவித் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்பட்டதாகவும் சாலையின் தூரம், ஆரம்பித்த நிறைவு செய்த தேதிகள், செலவு செய்த தொகை, ஆகிய சகல விபரங்களும் தாங்கிய விளம்பர பலகை யொன்று சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்தது. எதியோப்பியாவின் நெடுஞ்சாலைகளிலும் வீதிகளிலும் இப்படியான விளம்பரப் பலகைகளையும், எயிட்ஸ் விழிப்புணர்வு தட்டிகைகளையும், உதவி வழங்கும் உலக நிறுவனங்கள் அடுத்தடுத்து வைத்திருப்பார்கள்.

முகுந்தன் தங்கியிருந்த ஹோட்டல், நெடுஞ்சாலையைக் கடக்கும் குறுக்கு வீதியில், அந்தக் குறுக்கு வீதியையே முகப்பாகக் கொண்டு அமைந்திருந்தது. நெடுஞ்சாலையில் யப்பானிலிருந்து இறக்குமதியான ஆடம்பர வாகனங்கள் அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தன. பாதசாரிகள் சர்வசாதாரணமாக, குறுக்கும் நெடுக்குமாக நெடுஞ்சாலையைக் கடந்தார்கள். சந்தியை ஒட்டிய ஓடையில் அழுக்குத் துணிகளுடன் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்த எதியோப்பிய குழந்தைகளை, வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றான் முகுந்தன்.

'ஹலோ சேர்! என்னை ஞாபகம் இருக்கிறதா?' எனக் கேட்டவாறே எதியோப்பிய இளைஞன் ஒருவன், புன்னகைத்தான். கண்ணியமாக உடையணிந்து, அவன் சரளமாக ஆங்கிலம் பேசினான். வேறு மொழிகளும் தெரியும் என்பதைக் காட்ட ஜேர்மன், இத்தாலி மொழிகளிலும் ஆங்கிலத்தில் கூறிய கருத்தைப் பேசிக் காட்டினான்.

'நான்தான் நேற்று இரவு உங்களுக்கு ஹோட்டலில் உணவு பரிமாறினேன். நான் எட்வேட், என்னைத் தெரியவில்லையா? எட்வேட் மெக்கோனன்' எனத் தன் முழுப்பெயரையும் சொன்னான்.

முகுந்தன் தங்கியிருந்த ஹோட்டலில் உணவு பரிமாறுபவர்கள் அனைவரும் பெண்கள். இவன் பொய் பேசுகிறான் என்று தெரிந்தும் அவனைப் பார்த்து புன்னகைத்தான். இவனைப் போன்றவர்கள் ஏமாற்றுப் பேர்வளிகள். இவர்களிடம் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். இருப்பினும் அவனது மொழிப் புலமையும், பல்வேறு மொழிகளைப் பேசிய லாவகமும் அவனைக் கவனிக்க வைத்தன. முகுந்தனின் புன்னகையை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு, வெகு இயல்பாக எதியோப்பிய கலாசாரம் பற்றி முகுந்தனுடன் ஆங்கிலத்தில் பேசினான். கறுப்பை மூடி, லேசாக வெள்ளை நிறம் பூசினால் கலவை நிறம் ஒன்று தோன்றுமே. அத்தகைய ஒரு அரிதான நிறத்தில் அவன் அழகாகத் தோன்றினான். உண்மைதான். எதியோப்பாயர்கள் மிக அழகானவர்கள். ஆபிரிக்க, அராபிய, இந்திய சங்கமத்தில் பல்வேறு மனித சாயல்களை அங்கு காணலாம். எடுப்பான மூக்கும், தொந்தி இல்லாத இறுக்கமான நெடிய உடல்வாகும் ஒருவகைக் கவர்ச்சியை ஏற்படுத்தும். இதன் காரணமாகத்தான் குழந்தைகள் இல்லாத பல ஐரோப்பிய தம்பதிகள், எதியோப்பிய குழந்தைகளைத் தத்தெடுக்க முன்வருகிறார்கள். இந்தத் தத்தெடுப்பு சம்பிரதாயத்துக்காக ஐரோப்பியத் தம்பதிகள் பலர் முகுந்தன் தங்கிய ஹோட்டலிலேயே தங்கியிருந்தார்கள்.

'இன்று சனிக்கிழமை விடுமுறைதானே? கேளிக்கைகள் நிறைந்த உல்லாசக் கிளப்புகள் இங்கு நிறையவே இருக்கின்றன. எதியோப்பிய நடனமும் உண்டு. மார்பை குலுக்கி ஆடும் எதியோப்பிய நடனம், மிகவும் பிரபல்யமானது. போவோமா?' எனக்கேட்டு, எட்வேட் தன் தொழிலில் சிரத்தையாக இருந்தான். இவனைப் போன்றவர்கள், இரவு விடுதிகளாலும், கேளிக்கை விடுதிகளாலும் வாடிக்கையாளர்களை அழைத்து வருவதற்கென கொமிஷன் அடிப்படையில் ஏஜண்டுகளாக அமர்த்தப்பட்டவர்கள். கொஞ்சம் அசமந்தமாக இருந்தாலும் ஏமாற்றக் கூடியவர்கள் என்பதையும், அவர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்வதுதான் தற்பாதுகாப்புக்கான சூத்திரம் என்பதையும் முகுந்தன் முன்னரே அறிந்திருந்தான். இதேவேளை, மிக அவதானமாக நடந்து கொண்டால் நிறையவே தகவல்களையும் புதினங்களையும் அள்ளிக் கொள்ளலாம் எனவும் கேள்விப்பட்டிருக்கிறான். எட்வேட் தன் தொழிலுக்கு புதியவன் என்பதை அவனுடன் பேசிய கொஞ்ச நேரத்திலேயே  முகுந்தன் புரிந்து கொண்டான். கற்றுக்குட்டியான அவனிடம் ஏமாறமாட்டேன் என்கிற நம்பிக்கை முகுந்தனுக்கு ஏற்பட்டது.

'கோப்பி குடிப்போம் வா' என அழைத்தான். எட்வேட்டுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அருகில் இருந்த கோப்பிக்கடை ஒன்றைக் கண்டுபிடித்து அதற்குள் நுழைந்தார்கள். எதியோப்பியாவின் மலைப் பகுதிகளிலே நிறைய கோப்பிச் செடிகள் பயிரிடப்படுகின்றன. அங்கு விளையும் கோப்பி பற்றி எதியோப்பியர்கள் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள். 'எதியோப்பிய ஸ்பெஷல் கோப்பி' என்ற விளம்பரங்களுடன் வீதியோரம் பல கடைகள் வியாபாரம் செய்கின்றன. கண் அசைவால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் எதியோப்பிய அழகிகள் இங்கும் தமது வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருப்பார்கள். காலை வேளைகளில் கோப்பிக் கடையில் கூட்டம் அதிகம் இருப்பதில்லை. கோப்பிக்கடையின் மூலையொன்றில் அவர்கள் வசதியாக அமர்ந்துகொண்டார்கள். கேளிக்கை விடுதியொன்றுக்கு முகுந்தன் செல்லாத ஏமாற்றம் அவன் முகத்தில் தெரிந்தது. அன்றைய சீவியம், அவனுக்கு கிடைக்கும் கொமிஷனில் தான் தங்கியுள்ளது. முகுந்தனிடம் எந்தவித பிரயோசனமும் இல்லை என்றெண்ணிக் கழற்றிவிட எத்தனித்தான்.

ஆயிரம் Birr (எதியோப்பிய பணம்) எடுத்து, 'இதை வைத்துக் கொள்' எனக் கொடுத்தான் முகுந்தன்.

'சேர்!' என ஏதொ சொல்ல அவதிப்பட்டான். வார்த்தைகள் அவன் தொண்டையில் அடைத்துக்கொண்டன. ஒருவகைத் திணறல். அவனுடைய செயலுக்கான காரணம் முகுந்தனுக்குப் புரிந்தது. முகுந்தன் கொடுத்த பணம் அவனது ஒருவார ஊதியம். டொலரிலே செலவு செய்து பழகிய முகுந்தனுக்கு அது பெரிய தொகையல்ல.

'உண்மையாகவே இந்தப் பணம் எனக்கா? கேளிக்கை விடுதிக்கும் வரமாட்டேன் என்கிறீர்களே?' என ஒருவித சந்தேகத்துடன் ராகம் இழுத்தான்.

'உனக்குத்தான், உன்னுடன் சாவகாசமாகப் பேச வேண்டும். எடுத்துக்கொள்' என்றான் முகுந்தன்.

-2-

தியோப்பிய மலைப் பிரதேசத்தின், எரிற்றியா எல்லையில் அமைந்த கிராமம் அது. மிகவும் அழகான கிராமம். அங்குதான் எட்வேட் பிறந்து வளர்ந்தவன். இருப்பினும், படித்ததெல்லாம் கிராமத்தை ஒட்டிய Axum என்ற நகரத்தில். கிறீஸ்தவ மிஷனரி பாடசாலையொன்றில் சரித்திரம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை முதன்மைப் பாடங்களாகவும் பிரென்ஞ், ஜேர்மன், லற்றின் ஆகிய மொழிகளைத் துணைப் பாடங்களாகவும் கற்றதாகச் சொன்னான்.

சரித்திரரீதியாக, எதியோப்பியா அபிசீனியா(Abyssinia) என்று அழைக்கப்பட்டது. அண்டை நாடான எரிற்றியாவை இத்தாலியர் தமது குடியேற்ற நாடாக்கினர். அங்கிருந்து எதியோப்பியாவை இணைத்துக் கொள்ள இத்தாலி முயன்றது. இவை பற்றிய பூரண எதியோப்பிய வரலாற்று அறிவு, அவனுக்கு இருந்ததை அவனுடன் பேசிய குறுகிய நேரத்தில் முகுந்தன் தெரிந்துகொண்டான்.

எரிற்றியா தனிநாடாவதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ, அவை அனைத்தும், இலங்கை ஈழப் பிரச்சனையிலும் உண்டு. எதியோப்பிய புத்திசாலி இளைஞன் ஒருவன் இதை எப்படிப் பார்க்கிறான் என்பதை தெரிந்துகொள்ளவே அவனிடம் முகுந்தன் பேசிக் கொண்டிருந்தான். இல்லையேல் விலைமாதர்களுக்கு வாடிக்கை பிடிக்கும் ஒரு ஏஜெண்டிற்கு ஆயிரம் Birr பணத்தை விட்டெறிந்திருக்க மாட்டான்.

எதியோப்பியாவில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழி Amharic. இதுவே எதியோப்பிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழி. எரிற்றியாவில் Tigrinya என்கிற மொழியே பொதுவழக்கில் உண்டு. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இத்தாலிய ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்த எரிற்றியா, இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின், பிரித்தானியர்களின் நிர்வாகத்துக்குரிய நிலப்பரப்பாக்கப்பட்டது.

இலங்கையின் தமிழப் பகுதிகள் எவ்வாறு 1832ம் ஆண்டு பிரித்தானியரின் நிர்வாக வசதிக்காக, சிங்கள பகுதிகளுடன் இணைக்கப்பட்டனவோ, அவ்வாறே ஆட்சி வசதிக்காக 1952ம் ஆண்டு பிரித்தானியர்களால் எரிற்றியாவும் எதியோப்பியாவும் ஒரே நாடாக இணைக்கப்பட்டன. இது எண்ணையையும் தண்ணியையும் கலக்கும் விவகாரத்துக்கு நல்லதோர் உதாரணம்.

எரிற்றிய மக்கள் எதியோப்பிய தேசியத்தில் கரைந்து போகத் தயாராக இல்லை. இதனால் இனப்போர் எழுந்தது. இரண்டு பக்கமும் உயிர் சேதம் பெருகியது. எட்வேட் பிறந்து வளர்ந்த, எரிற்றிய எல்லையோர மலைப் பிரதேசத்தில் கிளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டப் பட்டதாக முகுந்தன் ஊடகங்களில் வாசித்திருக்கிறான். இதுபற்றி அவனிடம் கேட்டான்.

சிறிது நேரம் மௌனமாக இருந்தவன் தன் முன்னே மேசையில் இருந்த கோப்பியை ஒரே மடக்கில் குடித்த பின்னர் பேசத்துவங்கினான்.

'எரிற்றியாவில் இருந்து கொண்டே, எதியோப்பியாவை அடிமைப்படுத்த இத்தாலி முயன்றது. காடுகளும் தொடர் மலைகளும் நிறைந்துள்ள எதியோப்பியாவில் மலை வாழ்க்கைக்கு நன்கு பழக்கப்பட்ட எதியோப்பிய அரசனையும், வில்லும் அம்பும் ஏந்திய அவரது படையையும் வெல்ல முடியவில்லை. 1936ம் ஆண்டு தொடக்கம் 1941ம் ஆண்டு வரை, இத்தாலிய ஆதிக்கம் எதியோப்பியாவின் சில பிரதேசங்களில் இருந்த போதிலும், எதியோப்பியா யாருக்கும் என்றுமே அடிமைப்பட்ட நாடாக இருந்ததில்லை. என் தந்தை வழிப்பாட்டனார் இத்தாலியர்களுடன் தீரமுடன் போர் புரிந்து மாண்டதாக என் தந்தை கூறுவார்.'

இதனைக் கூறியபோது எட்வேட் பெருமிதமடைந்தான். அது நியாயமானதும் கூட.

'உன் தந்தை இப்போதும் நீ பிறந்த கிராமத்தில்தான் இருக்கிறாரா?'

'இல்லை, அவர் கொல்லப்பட்டு விட்டார்.' என்றவன் சில விநாடி மௌனத்தின் பின் மீண்டும் தொடர்ந்தான்.

'இத்தாலிய ஆதிக்கத்ததுக்கு எதிராக எதியோப்பியர்கள் தீரமுடன் போரிட்டார்கள். இங்கேதான் பிரித்தானியர்கள் வழமை போல தங்கள் மூக்கை நுழைத்துக் கொண்டார்கள். எதியோப்பிய வீரர்களுக்கு உதவுகிறேன் பேர்வழி எனக்கூறிக் கொண்டு, போரில் இத்தாலியர்களை வெற்றிகொண்டு இரு நாடுகளையும் இணைத்தார்கள்'

'அங்கேதான் பாரிய வரலாற்றுத் தவறு ஏற்பட்டது' எனப் புத்தகங்களிலே படித்த ஞானத்தை முகுந்தன் அவிழ்க்கத் துவங்கிய பொழுது சைகை மூலம் நிறுத்தி, அவன் தொடர்ந்தான்.

'நீங்கள் சொல்வது உண்மைதான். இத்தாலியர்களை வெளியேற்றுவதில் எதியோப்பியர்களும் எரிற்றியர்களும் சேர்ந்தே போரிட்டார்கள். பிரித்தானியர்களால் இரு நாடுகளும் இணைக்கப்பட்ட பின், எதியோப்பியர்களின் ஆதிக்கம் மேலோங்க, எதியோப்பியர்களுக்கும் எரிற்றியர்களுக்கும் இடையில் போர் எழுந்தது'

'இதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லு. இதே நிலைமை தான் எனது தாய் நாடாகிய ஸ்ரீலங்காவிலும் நடந்தது. என் மூதாதையர் வாழ்ந்த தமிழ்ப் பிரதேசத்தைச் சிங்கள நாட்டுடன் இணைத்த ஆங்கிலேயர், சிங்கள இனத்தின் மேலாதிக்கத்திற்கு வழிவகுத்தார்கள்' என்றான் முகுந்தன்.

'உங்கள் நாட்டுப் பிரச்சனைபற்றி நான் படித்த மிஷன் பாடசாலையில் மதபோதகர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். சிங்களம் அங்கு அரச மொழியாக்கப்பட்டது போலவே, இங்கும் இணைக்கப்பட்ட இரண்டு நாட்டுக்கும் எதியோப்பிய மொழியாகிய Amharic பொது மொழியாக பிரகடனப் படுத்தப்பட்டது.'

'எதியோப்பியாவுடன் ஒப்பிடும்போது எரிற்றியா பரப்பளவில் மட்டுமல்ல, மக்கள் தொகையிலும் மூன்றில் ஒரு பகுதிக்கும் குறைவானது. எரிற்றியர்களின் மொழி, கலாசாரம் ஆகியன எதியோப்பியர்களிலும் பார்க்க முற்றிலும் வேறுபட்டன. செயற்கையான அரசியல் இணைப்பு ஓர் இனத்துக்கு இழைக்கப்படும் அநீதியல்லவா? கொதிக்கும் எண்ணைக் கொப்பரையிலிருந்து தப்புவதற்கு நெருப்பில் குதித்த கதை போல, இத்தாலியர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு எதியோப்பியரின் ஆதிக்கத்திற்குள் சிக்கி, எரிற்றியர்கள் விழித்தார்கள்' என்றான், முகுந்தன். இதைச் சொல்லும்பொழுது இலங்கைத் தமிழரின் நிலையை நினைவு படுத்திக் கொண்டதால் உணர்ச்சி வசப்பட்டான்.

'நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். எரிற்றியர்களால் மொழித் திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எரிற்றிய மக்கள் Amharic மொழியைப் பேசவும் பயிலவும் மறுத்தார்கள். இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட கிளர்ச்சியில், 1993ம் ஆண்டு 'எரிற்றிய மக்கள் விடுதலை இயக்கம்' எரிற்றியாவை தன்னிச்சையாகத் தனிநாடாகப் பிரகடனப் படுத்திக் கொண்டது'

'அந்த வரலாற்றைக் கொஞ்சம் விபரமாகச் சொல்லேன்' என ஆவலுடன் கேட்டான் முகுந்தன்.

'1974ஆம் ஆண்டில் எதியோப்பியாவில் சோவியத் சார்புடைய கம்மியூனிச சித்தாந்தத்திற்கு ஆதரவானவர்களுடைய கையோங்கி, இராணுவப் புரட்சி மூலம் சோவியத் யூனியனுக்கு விசுவாசம் தெரிவித்த இராணுவம் ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றியது'.

'உலகில் பழமைவாய்ந்த கிறிஸ்தவ மதத்தை ஏற்றிருந்த எதியோப்பிய மக்களால், கம்யூனிச சித்தாந்தங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் 'எதியோப்பிய மக்கள் புரட்சிகர இயக்கம்' எதியோப்பியாவில் தோன்றியது. எதிரிக்கு எதிரி நண்பன் அல்லவா? எரிற்றிய விடுதலைக்குப் போராடிய, எரிற்றிய மக்கள் விடுதலை இயக்கத்துடன் கம்யூனிச இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட ஆரம்பிக்கப்பட்ட, எதியோப்பிய மக்கள் புரட்சிகர இயக்கம் சேர்ந்து கொண்டது'

இந்த இடத்தில் எட்வேட் ஒரு முத்தாய்ப்பு வைத்தான். ஏன் பேச்சை நிறுத்தி எழுந்தான் என்பது விளங்கவில்லை. சிரித்தவாறே சங்கடத்துடன் சிறுநீர் கழித்து வருவதாகக் கூறிச் சென்றான்.

எதியோப்பிய மக்கள் விடுதலை இயக்கம் போன்றே இலங்கையிலும், ஜே.வி.பி. என்கிற மக்கள் விடுதலை முன்னணி, சிங்கள விடுதலைக்கென்று ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இனவாத சக்தியாக வளர்ந்திருப்பதை நினைவுபடுத்திக் கொண்டான் முகுந்தன்.

எட்வேட் ஒரு சிகரெட்டை பற்ற வைத்த வண்ணம் மீண்டும் வந்தமர்ந்தான்.

'இரண்டு இயக்கங்களும் சோவியத் சார்புடைய இராணுவ ஆட்சிக்கு எதிராக போர் புரிந்தார்கள். மிகுதியைச் சொல்லு' என விட்ட இடத்தை நினைவுபடுத்தி, முகுந்தன் அடி எடுத்துக் கொடுத்தான்.

'சோவியத் சார்பு இராணுவ ஆட்சி, சர்வதேச முதலாளித்துவத்துக்குத் தோதுப்படவில்லை. முதலாளித்துவ நாடுகள், இரண்டு விடுதலை அமைப்புகளும் இணைந்து போராடுவதை சாத்தியப்படுத்துவதில் வெற்றிபெற்றன. இதனால் சோவியத் சார்பு ஆட்சி வீழ்ந்தது. இந்த போட்டத்தின் தொடர்ச்சியாக, எரிற்றியர்கள் 1993ம் ஆண்டு எரிற்றியாவை தனிநாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்கள்' என்றான்.

அந்த நிகழ்ச்சிகளை அசைபோடுபனைப் போல் எட்வேட் மௌனம் சாதித்தான்.

'இந்தப் பிரிவினைப் பிரகடனத்திற்குப் பின்னர் அமைதி நிலவியதா?' எனக் கொக்கி போட்டு அவனை மீண்டும் சம்பாஷனைக்குள் இழுத்தான் முகுந்தன்.

'அதுதான் இல்லை. 1998ம் ஆண்டு மீண்டும் எதியோப்பிய, எரிற்றிய எல்லைப் பிரச்சினை துவங்கியது. அந்தக் கிளர்ச்சியில்தான் என் தந்தை படுகொலை செய்யப்பட்டார். எரிற்றிய எல்லையில், எதியோப்பியாவுக்குள், எரிற்றியர்கள் கணிசமான அளவில் வாழ்ந்தார்கள். அவர்கள் அனைவரும் இரவோடு இரவாக உடுத்த உடுப்புடன் எரிற்றியாவுக்குத் துரத்தப்பட்டார்கள். அவர்களுள் என் காதலியும் ஒருத்தி. அவளை இன்னும் நான் மனப்பூர்வமாகக் காதலிக்கிறேன். அவளை இனிப் பார்ப்பது சாத்தியமாகுமென நான் நினைக்கவில்லை' என்றான் பரிதாபமாக.

'உன் தாயார் எங்கிருக்கிறார்? உனக்கு சகோதரர்கள் இல்லையா?'

ஏனைய உறவுகளை நினைவுபடுத்தல், காதலியை மறப்பதற்கான வடிகாலாய் அமைதல் கூடுமென்கிற எண்ணத்தினாலும் அதைக் கேட்டான்.

'தொழில் நிமிர்த்தம் என் தாய், எரிற்றியாவில் இருந்து எதியோப்பியாவின் எல்லையோரம் உள்ள Axum நகரத்துக்குக் குடிபெயர்ந்ததாக அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் ஒரு மருத்துவத் தாதி. என் தந்தை இத்தாலியில் பயிற்சி பெற்ற பிரபல மருத்துவர். என் தந்தையின் தாதியாகப் பணிபுரிந்த போது இருவரும் காதலித்து மணம் முடித்துக் கொண்டார்களாம்.

இந்தக் தகவல்களை கூறியபின், எட்வேட் தன் இரு கைகளாலும் முகத்தை பொத்தியவாறு மௌனமாக இருந்தான். பின்னர் மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து, தன்னைச் சுதாகரித்துக் கொண்டான்.

அவன் கதை தொடர்ந்தது.

'கிளர்ச்சியாளர்களுக்கு மருத்துவ உதவி புரிந்ததாக குற்றம் சாட்டி, சோவியத் சார்பு எதியோப்பிய இராணுவம், என் தந்தையை சிறையில் அடைத்தது. பல மாதங்களின் பின்னர் அவர் அங்கேயே கொல்லப்பட்டதாகத் தகவல் வந்தது. தந்தையை கொலை செய்த ஆத்திரத்தில் எனது தாய் எரிற்றிய மக்கள் விடுதலை இயக்கத்துக்குத் தாதியாக பணிபுரிந்திருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ஓர் இரவு இராணுவம் என் தாயையும், அவருடன் வசித்த அனைவரையும் அவர்களுடைய வீட்டிலேயே சுட்டுக் கொன்றது. நான் மிஷனரி பாடசாலையின் விடுதியில் தங்கியிருந்ததால் தப்பிப் பிழைத்தேன். அதன்பின் எங்கெல்லாமோ சுற்றித் திரிந்து இப்போது அடிசபாபாவில் வாழ்கிறேன். நான் படிக்க வேண்டும், அதற்கு பணம் வேண்டும். அதற்காகத்தான் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளேன்' என்றவன் சிகரெட்டை வெறுப்புடன் நூர்த்து எறிந்தான்.

அந்த நேரத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் நாமிருந்த கோப்பிக் கடைக்குள் நுழைந்து, எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு பிரசுரத்தை விநியோகித்தார்கள். உணவு விடுதிகள், கேளிக்கை நிலையங்கள் எனப் பொது இடங்களில் அடிக்கடி இவர்கள் இத்தகைய பிரசாரங்களில் ஈடுபடுவார்கள். இதற்கு ஐக்கிய நாடுகள் சபை உலக வங்கியூடாக பெருந்தொகை பணத்தைச் செலவு செய்கிறது. இருப்பினும் எயிட்ஸ் நோய், எதியோப்பிய சௌக்கியத்துக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது. எட்வேட் துண்டு பிரசுரத்தை வாங்கவில்லை. வேண்டாம் என சைகை மூலம் தெரிவித்தான். அதிதீவிர பிரசாரத்தினால் ஏற்படச் சலிப்பாகக்கூட இருக்கலாம்.

நீ ஒரு வைத்திய பரம்பரையில் பிறந்து வளர்ந்தவன். எயிட்ஸ் இங்கு பாரிய பிரச்சனை என்பது உனக்குத் தெரியும். இருப்பினும் கேளிக்கை விடுதிக்கு ஆட்களைக் கூட்டிச் செல்வது தவறாக தெரியவில்லையா?'

'தவறுதான். எனக்கு வேறு வழி தெரியவில்லை. என் கனவு, சரித்திர பாடத்தில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்று ஒரு பேராசிரியராக வேண்டுமென்பதே. அதற்குப் பணம் வேண்டும். முன்பின் தெரியாத, எனக்கென யாருமற்ற இந்த அடிசபாபா நகரத்திலே, அன்றாடம் உயிர் வாழ்வதே ஒரு போராட்டமாக உள்ளது. போரின் தாக்கத்தினால் நல்லொழுக்க விதிகள் செத்துவிடுகின்றன....'

'உனக்குத்தான் பல மொழிகள் தெரிகிறதே. இந்தத் தகைமையை வைத்து நல்ல வேலை என்று தேடிக்கொள்ள முடியாதா?’

‘Sir, நீங்கள் வாழும் உலகம் வேறு. ஆபிரிக்கா வேறு. இங்கு வேலை எடுப்பதானால் 'சிபார்சு' வேண்டும். யாராவது பிணை நிற்கவேண்டும். முன்பின் தெரியாத இந்த நகரத்தில் எனக்கு பிணை கொடுக்க யார் வருவார்கள், நான் பார்ப்பது நியாயமான தொழிலல்ல என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ருப்பினும் எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றான் எட்வேட்.

மதியம் தாண்டிவிட்டது என்பதை சடுதியாக உணர்ந்தான் முகுந்தன். பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் அவனை மதிய உணவுக்கு அழைத்திருந்தார். பல்கலைக்கழகத்தினர் தனியோர் உலகில் வாழப் பழகிக் கொண்டவர்கள். அது புத்திஜீவித உலகம் என அவர்கள் கற்பனை செய்து வைத்திருக்கும் உலகம். அவர்கள் எதியோப்பியாவின் மறுபக்க வாழ்க்கை ஒன்று இல்லாததுபோல நடித்தார்கள். எட்வேட் பேசிய பல விஷயங்கள் உண்மையானவை என்பதை அவன் உடல்மொழியும் கண்களும் சொல்லின. மேலும் ஒரு கணிசமான தொகையை அவனுக்குக் கொடுத்து நன்றி சொல்லி, பேராசிரியரியரின் விருந்துக்குச் செல்ல முகுந்தன் விடைபெற்றான்.

முகுந்தன், தனது எதியோப்பிய அநுபவங்கள் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொண்டபோது, எரிற்றியா குறித்து அழுத்தம் கொடுத்தமைக்கு காணம் உண்டு. 1993ஆம் ஆண்டு மே மாதம் எதியோப்பியாவில் இருந்து பிரிந்து எரிற்றியா சுதந்திரம் பெற்றது. இதன் மூலம் பிரித்தானியர் செய்த பிழைகள் நேர் செய்யப்பட்டு, எரிற்றிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டது.

 சமீபத்தில் (March 2021), இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில், இலங்கை அரசுக்கு எதிராக, ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அத்தீர்மானத்துக்கு எதிராக, (இலங்கைக்கு ஆதரவாக) எரிற்றியா வாக்களித்ததைப் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இது பல மட்டங்களிலும் விவாதத்துக்குரிய பொருளாயிற்று. எரிற்றிய மக்களுக்கு இருந்த இனப்பிரச்சனைக்கும், இலங்கையில் தமிழ் சிங்கள இனங்களுக்கிடையே, இன்னமும் தீர்க்கப்படாது இருக்கும் இனப் பிரச்சனைக்கும், காரணிகள் ஒன்றே. இரண்டுக்கும் நிறைய ஒருமைப்பாடு உண்டு.

 ன்று சனிக்கிழமை. காலை உணவை முடித்ததும், சற்றே உலாத்த வேண்டும் போலத் தோன்றியது. வீதிக்கு வந்தான் முகுந்தன். அது எதியோப்பியாவையும் கென்யாவையும் இணைக்கும் நீண்ட நெடுஞ்சாலை. உலக வங்கியின் உதவித் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்பட்டதாகவும் சாலையின் தூரம், ஆரம்பித்த நிறைவு செய்த தேதிகள், செலவு செய்த தொகை, ஆகிய சகல விபரங்களும் தாங்கிய விளம்பர பலகை யொன்று சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்தது. எதியோப்பியாவின் நெடுஞ்சாலைகளிலும் வீதிகளிலும் இப்படியான விளம்பரப் பலகைகளையும், எயிட்ஸ் விழிப்புணர்வு தட்டிகைகளையும், உதவி வழங்கும் உலக நிறுவனங்கள் அடுத்தடுத்து வைத்திருப்பார்கள்.

முகுந்தன் தங்கியிருந்த ஹோட்டல், நெடுஞ்சாலையைக் கடக்கும் குறுக்கு வீதியில், அந்தக் குறுக்கு வீதியையே முகப்பாகக் கொண்டு அமைந்திருந்தது. நெடுஞ்சாலையில் யப்பானிலிருந்து இறக்குமதியான ஆடம்பர வாகனங்கள் அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தன. பாதசாரிகள் சர்வசாதாரணமாக, குறுக்கும் நெடுக்குமாக நெடுஞ்சாலையைக் கடந்தார்கள். சந்தியை ஒட்டிய ஓடையில் அழுக்குத் துணிகளுடன் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்த எதியோப்பிய குழந்தைகளை, வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றான் முகுந்தன்.

'ஹலோ சேர்! என்னை ஞாபகம் இருக்கிறதா?' எனக் கேட்டவாறே எதியோப்பிய இளைஞன் ஒருவன், புன்னகைத்தான். கண்ணியமாக உடையணிந்து, அவன் சரளமாக ஆங்கிலம் பேசினான். வேறு மொழிகளும் தெரியும் என்பதைக் காட்ட ஜேர்மன், இத்தாலி மொழிகளிலும் ஆங்கிலத்தில் கூறிய கருத்தைப் பேசிக் காட்டினான்.

'நான்தான் நேற்று இரவு உங்களுக்கு ஹோட்டலில் உணவு பரிமாறினேன். நான் எட்வேட், என்னைத் தெரியவில்லையா? எட்வேட் மெக்கோனன்' எனத் தன் முழுப்பெயரையும் சொன்னான்.

முகுந்தன் தங்கியிருந்த ஹோட்டலில் உணவு பரிமாறுபவர்கள் அனைவரும் பெண்கள். இவன் பொய் பேசுகிறான் என்று தெரிந்தும் அவனைப் பார்த்து புன்னகைத்தான். இவனைப் போன்றவர்கள் ஏமாற்றுப் பேர்வளிகள். இவர்களிடம் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். இருப்பினும் அவனது மொழிப் புலமையும், பல்வேறு மொழிகளைப் பேசிய லாவகமும் அவனைக் கவனிக்க வைத்தன. முகுந்தனின் புன்னகையை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு, வெகு இயல்பாக எதியோப்பிய கலாசாரம் பற்றி முகுந்தனுடன் ஆங்கிலத்தில் பேசினான். கறுப்பை மூடி, லேசாக வெள்ளை நிறம் பூசினால் கலவை நிறம் ஒன்று தோன்றுமே. அத்தகைய ஒரு அரிதான நிறத்தில் அவன் அழகாகத் தோன்றினான். உண்மைதான். எதியோப்பாயர்கள் மிக அழகானவர்கள். ஆபிரிக்க, அராபிய, இந்திய சங்கமத்தில் பல்வேறு மனித சாயல்களை அங்கு காணலாம். எடுப்பான மூக்கும், தொந்தி இல்லாத இறுக்கமான நெடிய உடல்வாகும் ஒருவகைக் கவர்ச்சியை ஏற்படுத்தும். இதன் காரணமாகத்தான் குழந்தைகள் இல்லாத பல ஐரோப்பிய தம்பதிகள், எதியோப்பிய குழந்தைகளைத் தத்தெடுக்க முன்வருகிறார்கள். இந்தத் தத்தெடுப்பு சம்பிரதாயத்துக்காக ஐரோப்பியத் தம்பதிகள் பலர் முகுந்தன் தங்கிய ஹோட்டலிலேயே தங்கியிருந்தார்கள்.

'இன்று சனிக்கிழமை விடுமுறைதானே? கேளிக்கைகள் நிறைந்த உல்லாசக் கிளப்புகள் இங்கு நிறையவே இருக்கின்றன. எதியோப்பிய நடனமும் உண்டு. மார்பை குலுக்கி ஆடும் எதியோப்பிய நடனம், மிகவும் பிரபல்யமானது. போவோமா?' எனக்கேட்டு, எட்வேட் தன் தொழிலில் சிரத்தையாக இருந்தான். இவனைப் போன்றவர்கள், இரவு விடுதிகளாலும், கேளிக்கை விடுதிகளாலும் வாடிக்கையாளர்களை அழைத்து வருவதற்கென கொமிஷன் அடிப்படையில் ஏஜண்டுகளாக அமர்த்தப்பட்டவர்கள். கொஞ்சம் அசமந்தமாக இருந்தாலும் ஏமாற்றக் கூடியவர்கள் என்பதையும், அவர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்வதுதான் தற்பாதுகாப்புக்கான சூத்திரம் என்பதையும் முகுந்தன் முன்னரே அறிந்திருந்தான். இதேவேளை, மிக அவதானமாக நடந்து கொண்டால் நிறையவே தகவல்களையும் புதினங்களையும் அள்ளிக் கொள்ளலாம் எனவும் கேள்விப்பட்டிருக்கிறான். எட்வேட் தன் தொழிலுக்கு புதியவன் என்பதை அவனுடன் பேசிய கொஞ்ச நேரத்திலேயே  முகுந்தன் புரிந்து கொண்டான். கற்றுக்குட்டியான அவனிடம் ஏமாறமாட்டேன் என்கிற நம்பிக்கை முகுந்தனுக்கு ஏற்பட்டது.

'கோப்பி குடிப்போம் வா' என அழைத்தான். எட்வேட்டுக்கு மிகுந்த மகிழ்ச்சி. அருகில் இருந்த கோப்பிக்கடை ஒன்றைக் கண்டுபிடித்து அதற்குள் நுழைந்தார்கள். எதியோப்பியாவின் மலைப் பகுதிகளிலே நிறைய கோப்பிச் செடிகள் பயிரிடப்படுகின்றன. அங்கு விளையும் கோப்பி பற்றி எதியோப்பியர்கள் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள். 'எதியோப்பிய ஸ்பெஷல் கோப்பி' என்ற விளம்பரங்களுடன் வீதியோரம் பல கடைகள் வியாபாரம் செய்கின்றன. கண் அசைவால் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் எதியோப்பிய அழகிகள் இங்கும் தமது வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருப்பார்கள். காலை வேளைகளில் கோப்பிக் கடையில் கூட்டம் அதிகம் இருப்பதில்லை. கோப்பிக்கடையின் மூலையொன்றில் அவர்கள் வசதியாக அமர்ந்துகொண்டார்கள். கேளிக்கை விடுதியொன்றுக்கு முகுந்தன் செல்லாத ஏமாற்றம் அவன் முகத்தில் தெரிந்தது. அன்றைய சீவியம், அவனுக்கு கிடைக்கும் கொமிஷனில் தான் தங்கியுள்ளது. முகுந்தனிடம் எந்தவித பிரயோசனமும் இல்லை என்றெண்ணிக் கழற்றிவிட எத்தனித்தான்.

ஆயிரம் Birr (எதியோப்பிய பணம்) எடுத்து, 'இதை வைத்துக் கொள்' எனக் கொடுத்தான் முகுந்தன்.

'சேர்!' என ஏதொ சொல்ல அவதிப்பட்டான். வார்த்தைகள் அவன் தொண்டையில் அடைத்துக்கொண்டன. ஒருவகைத் திணறல். அவனுடைய செயலுக்கான காரணம் முகுந்தனுக்குப் புரிந்தது. முகுந்தன் கொடுத்த பணம் அவனது ஒருவார ஊதியம். டொலரிலே செலவு செய்து பழகிய முகுந்தனுக்கு அது பெரிய தொகையல்ல.

'உண்மையாகவே இந்தப் பணம் எனக்கா? கேளிக்கை விடுதிக்கும் வரமாட்டேன் என்கிறீர்களே?' என ஒருவித சந்தேகத்துடன் ராகம் இழுத்தான்.

'உனக்குத்தான், உன்னுடன் சாவகாசமாகப் பேச வேண்டும். எடுத்துக்கொள்' என்றான் முகுந்தன்.

-2-

தியோப்பிய மலைப் பிரதேசத்தின், எரிற்றியா எல்லையில் அமைந்த கிராமம் அது. மிகவும் அழகான கிராமம். அங்குதான் எட்வேட் பிறந்து வளர்ந்தவன். இருப்பினும், படித்ததெல்லாம் கிராமத்தை ஒட்டிய Axum என்ற நகரத்தில். கிறீஸ்தவ மிஷனரி பாடசாலையொன்றில் சரித்திரம், ஆங்கிலம் ஆகிய பாடங்களை முதன்மைப் பாடங்களாகவும் பிரென்ஞ், ஜேர்மன், லற்றின் ஆகிய மொழிகளைத் துணைப் பாடங்களாகவும் கற்றதாகச் சொன்னான்.

சரித்திரரீதியாக, எதியோப்பியா அபிசீனியா(Abyssinia) என்று அழைக்கப்பட்டது. அண்டை நாடான எரிற்றியாவை இத்தாலியர் தமது குடியேற்ற நாடாக்கினர். அங்கிருந்து எதியோப்பியாவை இணைத்துக் கொள்ள இத்தாலி முயன்றது. இவை பற்றிய பூரண எதியோப்பிய வரலாற்று அறிவு, அவனுக்கு இருந்ததை அவனுடன் பேசிய குறுகிய நேரத்தில் முகுந்தன் தெரிந்துகொண்டான்.

எரிற்றியா தனிநாடாவதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ, அவை அனைத்தும், இலங்கை ஈழப் பிரச்சனையிலும் உண்டு. எதியோப்பிய புத்திசாலி இளைஞன் ஒருவன் இதை எப்படிப் பார்க்கிறான் என்பதை தெரிந்துகொள்ளவே அவனிடம் முகுந்தன் பேசிக் கொண்டிருந்தான். இல்லையேல் விலைமாதர்களுக்கு வாடிக்கை பிடிக்கும் ஒரு ஏஜெண்டிற்கு ஆயிரம் Birr பணத்தை விட்டெறிந்திருக்க மாட்டான்.

எதியோப்பியாவில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழி Amharic. இதுவே எதியோப்பிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழி. எரிற்றியாவில் Tigrinya என்கிற மொழியே பொதுவழக்கில் உண்டு. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இத்தாலிய ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்த எரிற்றியா, இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின், பிரித்தானியர்களின் நிர்வாகத்துக்குரிய நிலப்பரப்பாக்கப்பட்டது.

இலங்கையின் தமிழப் பகுதிகள் எவ்வாறு 1832ம் ஆண்டு பிரித்தானியரின் நிர்வாக வசதிக்காக, சிங்கள பகுதிகளுடன் இணைக்கப்பட்டனவோ, அவ்வாறே ஆட்சி வசதிக்காக 1952ம் ஆண்டு பிரித்தானியர்களால் எரிற்றியாவும் எதியோப்பியாவும் ஒரே நாடாக இணைக்கப்பட்டன. இது எண்ணையையும் தண்ணியையும் கலக்கும் விவகாரத்துக்கு நல்லதோர் உதாரணம்.

எரிற்றிய மக்கள் எதியோப்பிய தேசியத்தில் கரைந்து போகத் தயாராக இல்லை. இதனால் இனப்போர் எழுந்தது. இரண்டு பக்கமும் உயிர் சேதம் பெருகியது. எட்வேட் பிறந்து வளர்ந்த, எரிற்றிய எல்லையோர மலைப் பிரதேசத்தில் கிளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டப் பட்டதாக முகுந்தன் ஊடகங்களில் வாசித்திருக்கிறான். இதுபற்றி அவனிடம் கேட்டான்.

சிறிது நேரம் மௌனமாக இருந்தவன் தன் முன்னே மேசையில் இருந்த கோப்பியை ஒரே மடக்கில் குடித்த பின்னர் பேசத்துவங்கினான்.

'எரிற்றியாவில் இருந்து கொண்டே, எதியோப்பியாவை அடிமைப்படுத்த இத்தாலி முயன்றது. காடுகளும் தொடர் மலைகளும் நிறைந்துள்ள எதியோப்பியாவில் மலை வாழ்க்கைக்கு நன்கு பழக்கப்பட்ட எதியோப்பிய அரசனையும், வில்லும் அம்பும் ஏந்திய அவரது படையையும் வெல்ல முடியவில்லை. 1936ம் ஆண்டு தொடக்கம் 1941ம் ஆண்டு வரை, இத்தாலிய ஆதிக்கம் எதியோப்பியாவின் சில பிரதேசங்களில் இருந்த போதிலும், எதியோப்பியா யாருக்கும் என்றுமே அடிமைப்பட்ட நாடாக இருந்ததில்லை. என் தந்தை வழிப்பாட்டனார் இத்தாலியர்களுடன் தீரமுடன் போர் புரிந்து மாண்டதாக என் தந்தை கூறுவார்.'

இதனைக் கூறியபோது எட்வேட் பெருமிதமடைந்தான். அது நியாயமானதும் கூட.

'உன் தந்தை இப்போதும் நீ பிறந்த கிராமத்தில்தான் இருக்கிறாரா?'

'இல்லை, அவர் கொல்லப்பட்டு விட்டார்.' என்றவன் சில விநாடி மௌனத்தின் பின் மீண்டும் தொடர்ந்தான்.

'இத்தாலிய ஆதிக்கத்ததுக்கு எதிராக எதியோப்பியர்கள் தீரமுடன் போரிட்டார்கள். இங்கேதான் பிரித்தானியர்கள் வழமை போல தங்கள் மூக்கை நுழைத்துக் கொண்டார்கள். எதியோப்பிய வீரர்களுக்கு உதவுகிறேன் பேர்வழி எனக்கூறிக் கொண்டு, போரில் இத்தாலியர்களை வெற்றிகொண்டு இரு நாடுகளையும் இணைத்தார்கள்'

'அங்கேதான் பாரிய வரலாற்றுத் தவறு ஏற்பட்டது' எனப் புத்தகங்களிலே படித்த ஞானத்தை முகுந்தன் அவிழ்க்கத் துவங்கிய பொழுது சைகை மூலம் நிறுத்தி, அவன் தொடர்ந்தான்.

'நீங்கள் சொல்வது உண்மைதான். இத்தாலியர்களை வெளியேற்றுவதில் எதியோப்பியர்களும் எரிற்றியர்களும் சேர்ந்தே போரிட்டார்கள். பிரித்தானியர்களால் இரு நாடுகளும் இணைக்கப்பட்ட பின், எதியோப்பியர்களின் ஆதிக்கம் மேலோங்க, எதியோப்பியர்களுக்கும் எரிற்றியர்களுக்கும் இடையில் போர் எழுந்தது'

'இதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லு. இதே நிலைமை தான் எனது தாய் நாடாகிய ஸ்ரீலங்காவிலும் நடந்தது. என் மூதாதையர் வாழ்ந்த தமிழ்ப் பிரதேசத்தைச் சிங்கள நாட்டுடன் இணைத்த ஆங்கிலேயர், சிங்கள இனத்தின் மேலாதிக்கத்திற்கு வழிவகுத்தார்கள்' என்றான் முகுந்தன்.

'உங்கள் நாட்டுப் பிரச்சனைபற்றி நான் படித்த மிஷன் பாடசாலையில் மதபோதகர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். சிங்களம் அங்கு அரச மொழியாக்கப்பட்டது போலவே, இங்கும் இணைக்கப்பட்ட இரண்டு நாட்டுக்கும் எதியோப்பிய மொழியாகிய Amharic பொது மொழியாக பிரகடனப் படுத்தப்பட்டது.'

'எதியோப்பியாவுடன் ஒப்பிடும்போது எரிற்றியா பரப்பளவில் மட்டுமல்ல, மக்கள் தொகையிலும் மூன்றில் ஒரு பகுதிக்கும் குறைவானது. எரிற்றியர்களின் மொழி, கலாசாரம் ஆகியன எதியோப்பியர்களிலும் பார்க்க முற்றிலும் வேறுபட்டன. செயற்கையான அரசியல் இணைப்பு ஓர் இனத்துக்கு இழைக்கப்படும் அநீதியல்லவா? கொதிக்கும் எண்ணைக் கொப்பரையிலிருந்து தப்புவதற்கு நெருப்பில் குதித்த கதை போல, இத்தாலியர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு எதியோப்பியரின் ஆதிக்கத்திற்குள் சிக்கி, எரிற்றியர்கள் விழித்தார்கள்' என்றான், முகுந்தன். இதைச் சொல்லும்பொழுது இலங்கைத் தமிழரின் நிலையை நினைவு படுத்திக் கொண்டதால் உணர்ச்சி வசப்பட்டான்.

'நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறேன். எரிற்றியர்களால் மொழித் திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எரிற்றிய மக்கள் Amharic மொழியைப் பேசவும் பயிலவும் மறுத்தார்கள். இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட கிளர்ச்சியில், 1993ம் ஆண்டு 'எரிற்றிய மக்கள் விடுதலை இயக்கம்' எரிற்றியாவை தன்னிச்சையாகத் தனிநாடாகப் பிரகடனப் படுத்திக் கொண்டது'

'அந்த வரலாற்றைக் கொஞ்சம் விபரமாகச் சொல்லேன்' என ஆவலுடன் கேட்டான் முகுந்தன்.

'1974ஆம் ஆண்டில் எதியோப்பியாவில் சோவியத் சார்புடைய கம்மியூனிச சித்தாந்தத்திற்கு ஆதரவானவர்களுடைய கையோங்கி, இராணுவப் புரட்சி மூலம் சோவியத் யூனியனுக்கு விசுவாசம் தெரிவித்த இராணுவம் ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றியது'.

'உலகில் பழமைவாய்ந்த கிறிஸ்தவ மதத்தை ஏற்றிருந்த எதியோப்பிய மக்களால், கம்யூனிச சித்தாந்தங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் 'எதியோப்பிய மக்கள் புரட்சிகர இயக்கம்' எதியோப்பியாவில் தோன்றியது. எதிரிக்கு எதிரி நண்பன் அல்லவா? எரிற்றிய விடுதலைக்குப் போராடிய, எரிற்றிய மக்கள் விடுதலை இயக்கத்துடன் கம்யூனிச இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட ஆரம்பிக்கப்பட்ட, எதியோப்பிய மக்கள் புரட்சிகர இயக்கம் சேர்ந்து கொண்டது'

இந்த இடத்தில் எட்வேட் ஒரு முத்தாய்ப்பு வைத்தான். ஏன் பேச்சை நிறுத்தி எழுந்தான் என்பது விளங்கவில்லை. சிரித்தவாறே சங்கடத்துடன் சிறுநீர் கழித்து வருவதாகக் கூறிச் சென்றான்.

எதியோப்பிய மக்கள் விடுதலை இயக்கம் போன்றே இலங்கையிலும், ஜே.வி.பி. என்கிற மக்கள் விடுதலை முன்னணி, சிங்கள விடுதலைக்கென்று ஆரம்பிக்கப்பட்டு பின்னர் இனவாத சக்தியாக வளர்ந்திருப்பதை நினைவுபடுத்திக் கொண்டான் முகுந்தன்.

எட்வேட் ஒரு சிகரெட்டை பற்ற வைத்த வண்ணம் மீண்டும் வந்தமர்ந்தான்.

'இரண்டு இயக்கங்களும் சோவியத் சார்புடைய இராணுவ ஆட்சிக்கு எதிராக போர் புரிந்தார்கள். மிகுதியைச் சொல்லு' என விட்ட இடத்தை நினைவுபடுத்தி, முகுந்தன் அடி எடுத்துக் கொடுத்தான்.

'சோவியத் சார்பு இராணுவ ஆட்சி, சர்வதேச முதலாளித்துவத்துக்குத் தோதுப்படவில்லை. முதலாளித்துவ நாடுகள், இரண்டு விடுதலை அமைப்புகளும் இணைந்து போராடுவதை சாத்தியப்படுத்துவதில் வெற்றிபெற்றன. இதனால் சோவியத் சார்பு ஆட்சி வீழ்ந்தது. இந்த போட்டத்தின் தொடர்ச்சியாக, எரிற்றியர்கள் 1993ம் ஆண்டு எரிற்றியாவை தனிநாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டார்கள்' என்றான்.

அந்த நிகழ்ச்சிகளை அசைபோடுபனைப் போல் எட்வேட் மௌனம் சாதித்தான்.

'இந்தப் பிரிவினைப் பிரகடனத்திற்குப் பின்னர் அமைதி நிலவியதா?' எனக் கொக்கி போட்டு அவனை மீண்டும் சம்பாஷனைக்குள் இழுத்தான் முகுந்தன்.

'அதுதான் இல்லை. 1998ம் ஆண்டு மீண்டும் எதியோப்பிய, எரிற்றிய எல்லைப் பிரச்சினை துவங்கியது. அந்தக் கிளர்ச்சியில்தான் என் தந்தை படுகொலை செய்யப்பட்டார். எரிற்றிய எல்லையில், எதியோப்பியாவுக்குள், எரிற்றியர்கள் கணிசமான அளவில் வாழ்ந்தார்கள். அவர்கள் அனைவரும் இரவோடு இரவாக உடுத்த உடுப்புடன் எரிற்றியாவுக்குத் துரத்தப்பட்டார்கள். அவர்களுள் என் காதலியும் ஒருத்தி. அவளை இன்னும் நான் மனப்பூர்வமாகக் காதலிக்கிறேன். அவளை இனிப் பார்ப்பது சாத்தியமாகுமென நான் நினைக்கவில்லை' என்றான் பரிதாபமாக.

'உன் தாயார் எங்கிருக்கிறார்? உனக்கு சகோதரர்கள் இல்லையா?'

ஏனைய உறவுகளை நினைவுபடுத்தல், காதலியை மறப்பதற்கான வடிகாலாய் அமைதல் கூடுமென்கிற எண்ணத்தினாலும் அதைக் கேட்டான்.

'தொழில் நிமிர்த்தம் என் தாய், எரிற்றியாவில் இருந்து எதியோப்பியாவின் எல்லையோரம் உள்ள Axum நகரத்துக்குக் குடிபெயர்ந்ததாக அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் ஒரு மருத்துவத் தாதி. என் தந்தை இத்தாலியில் பயிற்சி பெற்ற பிரபல மருத்துவர். என் தந்தையின் தாதியாகப் பணிபுரிந்த போது இருவரும் காதலித்து மணம் முடித்துக் கொண்டார்களாம்.

இந்தக் தகவல்களை கூறியபின், எட்வேட் தன் இரு கைகளாலும் முகத்தை பொத்தியவாறு மௌனமாக இருந்தான். பின்னர் மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து, தன்னைச் சுதாகரித்துக் கொண்டான்.

அவன் கதை தொடர்ந்தது.

'கிளர்ச்சியாளர்களுக்கு மருத்துவ உதவி புரிந்ததாக குற்றம் சாட்டி, சோவியத் சார்பு எதியோப்பிய இராணுவம், என் தந்தையை சிறையில் அடைத்தது. பல மாதங்களின் பின்னர் அவர் அங்கேயே கொல்லப்பட்டதாகத் தகவல் வந்தது. தந்தையை கொலை செய்த ஆத்திரத்தில் எனது தாய் எரிற்றிய மக்கள் விடுதலை இயக்கத்துக்குத் தாதியாக பணிபுரிந்திருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ஓர் இரவு இராணுவம் என் தாயையும், அவருடன் வசித்த அனைவரையும் அவர்களுடைய வீட்டிலேயே சுட்டுக் கொன்றது. நான் மிஷனரி பாடசாலையின் விடுதியில் தங்கியிருந்ததால் தப்பிப் பிழைத்தேன். அதன்பின் எங்கெல்லாமோ சுற்றித் திரிந்து இப்போது அடிசபாபாவில் வாழ்கிறேன். நான் படிக்க வேண்டும், அதற்கு பணம் வேண்டும். அதற்காகத்தான் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளேன்' என்றவன் சிகரெட்டை வெறுப்புடன் நூர்த்து எறிந்தான்.

அந்த நேரத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் நாமிருந்த கோப்பிக் கடைக்குள் நுழைந்து, எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு பிரசுரத்தை விநியோகித்தார்கள். உணவு விடுதிகள், கேளிக்கை நிலையங்கள் எனப் பொது இடங்களில் அடிக்கடி இவர்கள் இத்தகைய பிரசாரங்களில் ஈடுபடுவார்கள். இதற்கு ஐக்கிய நாடுகள் சபை உலக வங்கியூடாக பெருந்தொகை பணத்தைச் செலவு செய்கிறது. இருப்பினும் எயிட்ஸ் நோய், எதியோப்பிய சௌக்கியத்துக்கு பெரும் சவாலாகவே இருக்கிறது. எட்வேட் துண்டு பிரசுரத்தை வாங்கவில்லை. வேண்டாம் என சைகை மூலம் தெரிவித்தான். அதிதீவிர பிரசாரத்தினால் ஏற்படச் சலிப்பாகக்கூட இருக்கலாம்.

நீ ஒரு வைத்திய பரம்பரையில் பிறந்து வளர்ந்தவன். எயிட்ஸ் இங்கு பாரிய பிரச்சனை என்பது உனக்குத் தெரியும். இருப்பினும் கேளிக்கை விடுதிக்கு ஆட்களைக் கூட்டிச் செல்வது தவறாக தெரியவில்லையா?'

'தவறுதான். எனக்கு வேறு வழி தெரியவில்லை. என் கனவு, சரித்திர பாடத்தில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்று ஒரு பேராசிரியராக வேண்டுமென்பதே. அதற்குப் பணம் வேண்டும். முன்பின் தெரியாத, எனக்கென யாருமற்ற இந்த அடிசபாபா நகரத்திலே, அன்றாடம் உயிர் வாழ்வதே ஒரு போராட்டமாக உள்ளது. போரின் தாக்கத்தினால் நல்லொழுக்க விதிகள் செத்துவிடுகின்றன....'

'உனக்குத்தான் பல மொழிகள் தெரிகிறதே. இந்தத் தகைமையை வைத்து நல்ல வேலை என்று தேடிக்கொள்ள முடியாதா?’

‘Sir, நீங்கள் வாழும் உலகம் வேறு. ஆபிரிக்கா வேறு. இங்கு வேலை எடுப்பதானால் 'சிபார்சு' வேண்டும். யாராவது பிணை நிற்கவேண்டும். முன்பின் தெரியாத இந்த நகரத்தில் எனக்கு பிணை கொடுக்க யார் வருவார்கள், நான் பார்ப்பது நியாயமான தொழிலல்ல என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ருப்பினும் எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றான் எட்வேட்.

மதியம் தாண்டிவிட்டது என்பதை சடுதியாக உணர்ந்தான் முகுந்தன். பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் அவனை மதிய உணவுக்கு அழைத்திருந்தார். பல்கலைக்கழகத்தினர் தனியோர் உலகில் வாழப் பழகிக் கொண்டவர்கள். அது புத்திஜீவித உலகம் என அவர்கள் கற்பனை செய்து வைத்திருக்கும் உலகம். அவர்கள் எதியோப்பியாவின் மறுபக்க வாழ்க்கை ஒன்று இல்லாததுபோல நடித்தார்கள். எட்வேட் பேசிய பல விஷயங்கள் உண்மையானவை என்பதை அவன் உடல்மொழியும் கண்களும் சொல்லின. மேலும் ஒரு கணிசமான தொகையை அவனுக்குக் கொடுத்து நன்றி சொல்லி, பேராசிரியரியரின் விருந்துக்குச் செல்ல முகுந்தன் விடைபெற்றான்.

முகுந்தன், தனது எதியோப்பிய அநுபவங்கள் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொண்டபோது, எரிற்றியா குறித்து அழுத்தம் கொடுத்தமைக்கு காணம் உண்டு. 1993ஆம் ஆண்டு மே மாதம் எதியோப்பியாவில் இருந்து பிரிந்து எரிற்றியா சுதந்திரம் பெற்றது. இதன் மூலம் பிரித்தானியர் செய்த பிழைகள் நேர் செய்யப்பட்டு, எரிற்றிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டது.

 சமீபத்தில் (March 2021), இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில், இலங்கை அரசுக்கு எதிராக, ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அத்தீர்மானத்துக்கு எதிராக, (இலங்கைக்கு ஆதரவாக) எரிற்றியா வாக்களித்ததைப் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இது பல மட்டங்களிலும் விவாதத்துக்குரிய பொருளாயிற்று. எரிற்றிய மக்களுக்கு இருந்த இனப்பிரச்சனைக்கும், இலங்கையில் தமிழ் சிங்கள இனங்களுக்கிடையே, இன்னமும் தீர்க்கப்படாது இருக்கும் இனப் பிரச்சனைக்கும், காரணிகள் ஒன்றே. இரண்டுக்கும் நிறைய ஒருமைப்பாடு உண்டு.

- ஆசி கந்தராஜா – (ஞானம் மே 2021)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment