Saturday, 1 March 2025

காலச்சுவடு மார்ச் 2024 மதிப்புரை பொருளாதார அகதிகள்

பொருளாதார அகதிகள்

மதிப்புரை

தொ. பத்தினாதன்

 

அகதியின் பேர்ளின் வாசல்
(
நாவல்)
ஆசி. கந்தராஜா

காலச்சுவடு பதிப்பகம்
669
கே.பி. ரோடு
நாகர்கோவில் - 1

பக்.160
ரூ.200

ல்லாக் காலங்களிலும் புலப்பெயர்வுகள் நடந்திருந்தாலும் அவை காலத்துக்குக் காலம் மாறுபடுகின்றன. எத்தகைய மாறுபட்ட புலப்பெயர்வாக இருந்தாலும் அதன் மையம் உயிர்வாழ்தல். எல்லா உயிரினங்களும் நிலைத்து நிற்கவும் தன்னுயிர் காக்கவும் எனப் புலப்பெயர்வுக்கும் இடப்பெயர்வுக்கும் தன்னளவில் தயாராகின்றன. அத்தகைய உயிரினங்களின் இயங்கு நிலை அடிப்படையில்தான் மனித சமூகம் தன்னைத் தகவமைத்து வந்திருக்கிறது. மனித சமூகத்தின் இடப்பெயர்வுகளில் பாதகமான நிலைகள் இருந்தாலும் அதன் சாதகமான வகிபாகம் சமூகத்தில் பல மாற்றங்களை உருவாக்கிக்கொண்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை. இந்த மனித சமூக அசைவின் அடிப்படையில் ஆசி கந்தராஜாவின் ‘அகதியின் பேர்ளின் வாசல்’ நாவலை அணுகலாம்.

இலங்கையில் ஏற்பட்ட போர், கலவரங்கள் காரணமாக மேற்கத்திய நாடுகளுக்கான புலப்பெயர்வுகள் குறித்துப் பல நாவல்கள் தமிழ் இலக்கியச் சூழலில் வெளி வந்திருந்தாலும் அவற்றிலிருந்து மாறுபட்ட புலப்பெயர்வை ஆசி கந்தராஜா இந்நாவல் மூலம் வாசகருக்குத் திறந்துவிட்டிருக்கிறார்.

Friday, 21 February 2025


ஜீவநதி, தை 2025ளுமைச் சிறப்பிதழ்.

கந்தராஜா - பரணீதரன் செவ்வி.


1.  உங்கள் பெற்றோர், பிறந்த ஊர், சகோதரர்கள், குடும்பம் பற்றி அறிந்து கொள்ளலாமா?

இலங்கையின் வட மாகாணம், தென்மராட்சிப் பிரதேசத்தில் கைதடி என்ற கிராமத்தில், ஆ. சின்னத்தம்பி - முத்துப்பிள்ளை தம்பதிகளுக்கு 25 ஜனவரி 1950 அன்று பிறந்தேன். எனது தந்தை ஆறுமுகம் சின்னத்தம்பி புராண இதிகாசங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்த ஒர் தமிழ் ஆசான். எனக்கு மூன்று மூத்த சகோதரிகள். கடைக்குட்டி நான். எமது முன்னோர்கள் விவசாயிகள். பெற்றோர், சகோதரிகள், நான் என எல்லோரும் கைதடியிலேயே மணம்முடித்தோம். இதனால் நாங்கள் எந்தவித கலப்புமற்ற தூய கைதடியார் எனச் சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுவதுண்டு.

 

2. இலங்கையில் நீங்கள் கற்ற பாடசாலைகளைப் பற்றியும் உங்கள் திறமைகளை வெளிக்கொணரக் காரணமாக இருந்த ஆசிரியர்கள் பற்றியும் கூறுங்கள்?

ஆரம்பக் கல்வியை, கைதடியிலுள்ள பாடசாலைகளில், குறிப்பாக நான்கு ஆண்டுகள் கைதடி முத்துக்குமாரசுவாமி வித்தியாசாiலையில் கற்றேன். பின்னர் கோப்பாய் கிறீஸ்தவக் கல்லூரியிலும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியிலும் படித்தேன். கைதடி முத்துக்குமாரசுவாமி வித்தியாசாலையில் எனது தந்தையே எனது வகுப்பாசிரியராகவும் இருந்தார். அந்தவகையில் சிறுவயதுமுதல் எனக்குத் தமிழ் உணர்வை ஊட்டி வளர்த்தவர் அவரே.

 

3.   பாடசாலைக் காலத்தில் உங்களிடம் கலை இலக்கிய உணர்வு ஏற்படக் காரணம்?

தமிழ் இலக்கிய சூழலிலேயே நான் வளர்ந்தேன். எங்கள் வீட்டில் எல்லாமே தமிழில்த்தான் நடந்தன. இதனால் தமிழ்மொழி எனக்கு இயல்பாகவே வாலாயப்பட்டது.

இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில் (1960களில்), தினகரன் பத்திரிகையில், திங்கள் முதல் வெள்ளிவரை சவாரித்தம்பர் என்னும், கேலிச் சித்திரம் தொடராக வெளிவந்தது. இதன் மறுவடிவம், வார மஞ்சரியில் சித்திர கானம் என்ற பெயரில் பிரசுரமானது. இவற்றை வரைந்தவர் சுந்தர் என அழைக்கப்பட்ட திரு சிவஞானசுந்தரம் அவர்கள். இவரது கேலிச் சித்திர நாயகர்களான சவாரித்தம்பர், சின்னக்குட்டி, பாறிமாமி, மைனர் மச்சான் ஆகிய அனைவரும், நாம் அன்றாடம் ஊரில் சந்திக்கும் பாமர மக்கள், சாதாரண மனிதர்கள். யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில், இலங்கை அரசியல் மற்றும் சாதிவேறுபாடுகள், பிற்போக்குத் தனங்கள், மூடக் கொள்கைகளை, நகைச் சுவையாக இவர்கள் நையாண்டி செய்தார்கள். சுந்தரின் திறமையை ஊக்குவித்தவர் திரு கைலாசபதி அவர்கள்.அவர் அப்போது பேராசிரியரல்ல. பின்னரே பல்கலைக்கழகத்தில் இணைந்தார். கால ஓட்டத்தில் திரு கைலாசபதி தினகரனிலிருந்து விலகியதும், கார்டுநிஸ்ட் சுந்தர் வீரகேசரியில் சேர்ந்தார். அவருடன் அவரது கேலிச் சித்திரப் பாத்திரங்களும் வீரகேசரிக்கு வந்தன. இவரே பின்னர் சிரித்திரன் என்ற கேலிச் சித்திர சஞ்சிகையை யாழ்பாணத்தில் ஆரம்பித்து நடத்தியவர்.

அப்போது நான் ஆரம்ப பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தேன். சவாரித்தம்பரை வாசிக்காமல் படுப்பதில்லை என்னும் அளவுக்கு அதில் ஊறிப்போயிருந்தேன். சவாரித்தம்பரை வாசிப்பதற்காகவே, நான் செய்தித் தாளுக்காக காத்திருந்த காலங்கள், இன்றும் என் நினைவில் சுழன்றடிக்கின்றன. ஐயா படிப்பித்த தமிழ் பாடசாலைக்கு காலை பத்து மணியளவில் அவர் வாங்கும் செய்தித்தாள் வரும். காத்திருந்து அதை நான்தான் வாங்குவேன்.

இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில், இலவசமாக இலங்கைப் பாடசாலைகளில் 'பணிஸ்' கொடுத்தார்கள். இது தஹாநாயக்க கல்வி மந்திரியாக இருந்த காலத்தில், அமெரிக்க உதவியுடன் கொண்டுவரப்பட்ட இலவச உணவுத் திட்டம். இந்த 'பணிஸ்' இடைவேளையின் போது, செய்தித்தாளுடன் நண்பர்கள் புடைசூழ, வேப்ப மர நிழலில் அமர்வேன். அங்கு என்னுடைய சவாரித்தம்பர் ஓரங்க நாடகம், அமர்க்களமாக அரங்கேறும். அன்றைய செய்தித் தாளில் வந்த சவாரித்தம்பர் வசனங்களை ஏற்ற இறக்கங்களுடன் பேசி நடித்துக் காட்டுவேன். அத்துடன் சவாரித்தம்பர் சாயலில், நான் சுயமாக எழுதி வைத்திருக்கும் கதை வசனங்களையும் அவ்வப்போது எடுத்து விடுவேன். நண்பர்களின் சிரிப்பொலி அடங்க சிறிது நேரம் பிடிக்கும். அவசரமாக 'ஒண்டுக்கு' இருந்துவிட்டு அந்த வழியால் வந்த அப்புத்துரை வாத்தியாரும் மாணவர்களுடன் சேர்ந்து வாய்விட்டுச் சிரித்தார். அடுத்த பத்து நிமிஷத்துக்குள் ஐயாவின் வகுப்பறைக்குள் போன அப்புத்துரை வாத்தியார்சின்னண்ணை, உன்ரை மகன் நல்ல 'புலுடா'க்காரனாய்தான் வரப்போறான். எட்டிப்பார், வேப்ப மரத்தடியிலை நடக்கிற சமாவை. இப்பவே கண்டிச்சுவை. பிறகு கவலைப் படாதை' என வத்திவைத்தார். ஐயா வகுப்பறையில் இருந்து எட்டிப் பார்க்கவும், 'பணிஸ்' இடைவேளை முடிந்து மணி அடிக்கவும் நேரம் சரியாய் இருந்தது. அப்போது எனக்கு பதினொரு வயது மட்டுமே. இந்த வயதில் மட்டுமல்ல எந்த வயதிலும் எழுத்து, நாடகம், இலக்கியம் என ஒரு மாணவன் ஆர்வம் கொள்வது, அபத்தம் என நினைத்த காலம். இவற்றில் ஈடுபாடு கொண்டவன் உருப்படமாட்டான் என வாத்திமாரும் பெற்றோரும் நம்பினார்கள்.

அன்று மாலை இரவுச் சாப்பாட்டின் பின்னர், நான் எழுதிய கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டுவரச் சொன்னார் ஐயா. பிரதிகளைக் கொடுத்த பின், அடி வாங்குவதற்கு ஆயத்தமாக பெருவிரலால் மறு உள்ளங்கையை, மாறிமாறி அழுத்தி மஸாஜ் செய்தபடி நின்றேன். எனது கையெழுத்துப் பிரதிகளை நிதானமாக வாசித்து முடித்தவர், சிறிது நேரம் என்னை உற்றுப் பார்த்தபடி நின்றார். பின்னர், 'நித்திரை வந்தால் போய்ப் படு தம்பி' என அனுப்பிவிட்டார். 'தம்பி' என ஐயா விளித்தது நான் தொடர்ந்து எழுதுவதற்கு அவர் தந்த அநுமதி என எடுத்துக் கொண்டு தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். அந்த வகையில், பதின்பருவ காலங்களில் எனது சிறுகதைகள் ஈழநாடு, சுதந்திரன் பத்திரிகைகளில் வெளிவந்தன. எனது புனைவுகளில் இன்றும் அதிகம் காணப்படுவதாகச் சொல்லப்படும் நளினமும் நையாண்டியும், நான் சவாரித்தம்பரிடம் கற்றுக் கொண்டவையே.

கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரியும், குறிப்பாக தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியும் எனது ஆரம்பகால கலை இலக்கிய ஆர்வத்துக்கு நிறையவே தீனிபோட்ட கல்லூரிகள். 1965ம் ஆண்டு, கோப்பாய் கிறீஸ்தவ கல்லுரியில் நான் பத்தாம் வகுப்பு படித்த காலத்தில் நடந்த ஒரு இலக்கியத் திருட்டையும் இங்கு பதிவு செய்ய வேண்டும். நாடளாவிய ரீதியில் கலை இலக்கிய அமைப்பு ஒன்று நடத்திய சிறுகதைப் போட்டிக்கு, நான் எழுதிய சிறுகதை ஒன்றை அனுப்பியிருந்தேன். போட்டியின் முடிவு அறிவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் சில காலங்களின் பின்னர், என்னுடைய கதை வேறு ஒரு எழுத்தாளரின் பெயரில், இந்தியாவில் இருந்து வெளிவரும் கலைமகளில் வெளிவந்திருந்தது. இதற்கு சாட்சியாக, என் பள்ளிக்கூட நன்பன் சுகுணசபேசன் இன்றும் லண்டனில் வாழ்கிறான். இந்த இலக்கியத் திருட்டுக்கு எதிராக, பதினைந்து வயது பள்ளி மாணவனான என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எமக்கு தமிழ் இலக்கியம் கற்பித்த ஆசிரியரிடம் விஷயத்தைச் சொல்லி உதவி கேட்டேன். 'ஐந்து சதத்துக்கும் பெறுமதி இல்லாத, இந்த வேலையை விட்டிட்டு பத்தாம் வகுப்பு சோதினை வருகுது, படி' என்றார். இருந்தாலும், 'கலைமகளில் வெளிவருமளவுக்கு எனது கதை தகுதி பெற்றுள்ளது' என, எனக்குள் திருப்திப்பட்டுக் கொண்டு, பத்தாம் வகுப்பு இறுதிச் சோதனைக்கு படிக்க ஆரம்பித்தேன்.

 

4. மகாஜனாக்கல்லூரியில் கற்ற காலத்தில் நீங்கள் நடித்த நாடகங்கள் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்?

Wednesday, 23 October 2024

ரொம்--ஜேசியும் கறுத்தக் கொழும்பானும்.

ஆசி கந்தராஜா



ரொம்--ஜேசி (Tom E JC) மாமர இனம், இலங்கையின் எல்லாவெல என்னும் இடத்தில், பிலிப்பீன் நாட்டைச் சேர்ந்த ஒருவருடன் இணைந்து இனவிருத்தி செய்ததாகச் சொல்லப்படுகிறது.

ரொம் (Tom) என்பது இலங்கை நாட்டவரின் பெயர்ச் சுருக்கம். E, எல்லாவெல என்ற இடத்தைக் குறிப்பது. ஜேசி (JC) என்பது பிலிப்பீன் நாட்டைச் சேர்ந்த விவசாய விஞ்ஞானி Dr. Juan Carlos என்பவரின் முதல் எழுத்துக்கள்.

ரொம்--ஜேசி மாமரத்தை எப்படி இனவிருத்தி செய்தார்கள் என்பது வெளியில் சொல்லப்படவில்லை. அதை அவர்கள் மற்றவர்களுக்குச் சொல்லவும் தேவையில்லை. அது அவர்களின் ஆய்வு இரகசியம்.

எனது அபிப்பிராயப்படி, இது அயல்மகரந்தச் சேர்க்கையின் மூலம் இனவிருத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். மரபணு மாற்றத்தினூடாகவோ அல்லது விகார முறைமூலமோ இனவிருத்தி நடைபெற்றதற்கான சாத்தியக் கூறுகள் மிகமிகக் குறைவு.

Tuesday, 17 September 2024

ஜனாதிபதி தேர்தல்
Hope Against Hope
-----------------------------------
எம். ஏ. நுஃமான்

ஆங்கிலத்தில் Hope Against Hope என்று ஒரு மரபுத் தொடர் உண்டு. நம்பிக்கைக்கு எதிரான நம்பிக்கை என்று இதைத் தமிழில் நேரடியாக மொழிபெயர்க்கலாம். ஆனால், அது மூலத்தின் பொருளைத் தராது. ஒரு காரியம் நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்தாலும், அது நடக்கும் என்று நம்புவதை இது குறிக்கும். நம்பிக்கை இழந்த ஒரு சூழலில் ஒரு பற்றுக்கோடாக ஒன்றில் நம்பிக்கைவைக்கும் மனநிலையாக இதனைக் கொள்ளலாம். ஸ்டாலின் காலத்தில் அதிக பாதிப்புக்கு உள்ளாகி மறைந்த, பிரசித்திபெற்ற சோவியத் கவிஞர் ஒசிப் மண்டல்ஸ்தாமின் துயரம் தோய்ந்த வாழ்க்கை வரலாற்றை எழுதிய  அவரது மனைவி நடாஷா மண்டல்ஸ்தாம் அந்த நூலுக்கு வைத்த பெயரும் Hope Against Hope என்பதுதான்.

இலங்கை அரசியலில் ஏதாவது நல்லது நடக்கும் என்று நம்பிக்கை வைப்பதும் அது நடக்காமல் போவதும் இப்படித்தான் இருந்துவந்திருக்கிறது. எனது சொந்த அனுபவம் அப்படி. உங்கள் பலரின் அனுபவமும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்று முகநூலிலும், வட்ஸ்அப்பிலும் பலரும் எழுதுவதை வாசிக்கும் போது எனது பங்குக்கு இப்குறிப்பை எழுதலாம் போல் தோன்றிது.

இதுவரை நடந்த எட்டு ஜனாதிபதி தேர்தல்களில் மூன்றுமுறைதான் நான் வாக்களித்திருக்கிறேன். இரண்டு முறை எனது வாக்கு வெற்றி பெற்றிருக்கிறது. இரண்டு முறையும் வாக்காளன் என்றவகையில் நான் தோல்வியடைந்திருக்கிறேன். மாற்றம் வேண்டும், மாற்றம் வரும் என்ற நம்பிக்கையுடன் அளித்த வாக்குகள் அவை. ஆனால், அவை வீணாக்கப்பட்ட வாக்குகள் என்று விரைவிலேயே தெரிந்துவிட்டது.

முதல் வாக்கு 1994ல் சந்திரிகா அம்மையாருக்கு அளித்தது. அது ஒரு மாற்றத்துக்கான பேரலை வீசிய காலம். 17 ஆண்டு கால ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை வீழ்த்தி, ஒரு அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற ஒரு உறுதிப்பாடு பெரும்பாலான மக்கள் மத்தியிலும், இடதுசாரி ஆர்வலர்கள் மத்தியிலும் மேலோங்கி இருந்த காலம். அந்த உணர்வுக்குத் தலைமை வழங்கியவர் சந்திரிகா. முதல்முதல் ஒரு சிங்கள அரசியல் தலைவர் ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிராக, யுத்தத்துக்கு எதிராக, இனவாதத்துக்கு எதிராக அரசியல் மேடைகளில் பாலமாகக் குரல் எழுப்பினார் என்றால், அது அவர்தான். இதுவரை யாரும் பெறாத அளவு 62% வீத வாக்குகள் பெற்று அவர் ஜனாதிபதியானார். தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற எல்லா வாய்ப்புகளும் அவருக்கு இருந்தன. பத்துவருட கால அவருடைய ஆட்சியில் ஜனாதிபதி முறையை அவர் ஒழிக்கவில்லை. யுத்தத்தையும் இனவாதத்தையும் முடிவுக்குக் கொண்டுவரவில்லை. சமாதானத்தை ஏற்படுத்தவில்லை. பதிலாக யாழ்ப்பாணத்தை வென்றுவந்த அவரது தளதி வெற்றிப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சம்பிரதாய பூர்வமாக ஜனாதிபதியிடம் கையளித்ததை மக்கள் தொலைக்காட்சியில் கண்டுகளித்தனர்...

Thursday, 12 September 2024

யோனிப் பொருத்தம், மனிதர்களுக்கு மட்டுமல்ல.
அப்பிள் மரங்களுக்கும் தேவை!
அப்பிள் (Apple) மரங்களை சோடியாக நடவேண்டும். சோடிகள் ஒத்துவரவேண்டும். அவற்றின் யோனிகள் பொருந்தவேண்டும். இல்லையேல் காய்க்காது. Pink lady அப்பிளுக்கு பொருந்துவது Gala, Fuji, Granny Smith அப்பிள் யோனிகள். கீழேயுள்ள அட்டவணையைப் பாருங்கள். (வெகு சில விதிவிலக்கு)

அட்டவணை 1: அப்பிள் மரங்களுக்கான பொருத்தம்.




அட்டவணை 2: மனிதர்களுக்கான யோனிப் பொருத்தம்.



பல பியேர்ஸ் (Pears) மர இனங்களும் அப்படித்தான். ஆனால் Apricots, Peaches, Nectarines மரங்கள் காய்க்க, சோடி தேவையில்லை.

அட்டவணை 2: மனிதர்களுக்கான யோனிப் பொருத்தம்.
அட்டவணை 1: அப்பிள் மரங்களுக்கான பொருத்தம்.