Sunday, 30 April 2023

காய்களைக் கனியவைக்க, சௌக்கியக்கேடான கல்லுவைக்கும் முறை.

ஆசி கந்தராஜா

லங்கை இந்திய நாடுகளில் இப்பொழுது பழங்களின் காலம். மாம்பழங்கள் சந்தைக்கு வரத் தொடங்கிவிட்டன.

வேகமான வாழ்க்கை முறையால்தற்போது பழங்களைப் பழுக்க வைக்க வியாபாரிகள் இரசாயன முறையைக் கையாளுகின்றார்கள். இப்பழங்களை உண்பதால் வாயில் புண்வயிற்றுப் போக்குஒவ்வாமை போன்ற வியாதிகள் ஏற்பட்டு நாளடைவில் குடல் புற்று நோய் வர வாய்ப்புண்டு. இதற்குக் காரணம் காய்களைப் பழுக்க வைக்க வணிகர்களால் பயன் படுத்தப்படும் 'கல்சியம் கார்பைடுஎன்னும் இரசாயனம்தான் என  கண்டறியப்பட்டுள்ளது. அது புற்றுநோயை உண்டாக்கக்கூடியது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இயற்கையில் காய் பிஞ்சுகளை முற்றச் செய்வதும் பழுக்கச் செய்வதும் எதிலீன் என்னும் வாயு நிலை ஹோர்மோனே. இது எல்லாக் காய்களிலிருந்தும் இயற்கையாக வெளியேறும். இருந்தாலும் இது அப்பிள்எலுமிச்சை மற்றும் தோடங்காய்களிலிருந்து பெருமளவில் வெளியேறுவது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Saturday, 15 April 2023

 ஆசி கந்தராஜாவின் டயறிக்குறிப்பு:




தாவரத்துக்கு நல்ல கல்சியம் பசளை என்று சொல்லி, பலர் முட்டைக் கோதுகளை நொருக்கி மண்ணுடன் கலப்பதுண்டு. முட்டைக் கோதிலுள்ள கல்சியம், கல்சியம் காபனேற் (சுண்ணாம்புக் கல்) வடிவத்திலேயே உண்டு. இதிலுள்ள கல்சியம் அயன்கள் இலகுவில் வெளிவரமாட்டாது. எனவே முட்டைக்கோதிலுள்ள கல்சியம் உடனடியாகவே தாவரத்துக்குப் போய்ச்சேரும் என எண்ணவேண்டாம். குறைந்தது இரண்டு முன்று வருடங்களுக்கு மேல் எடுக்கும். 

கல்சியம் குறைபாடு இருந்தால் கல்சியம் நைற்றேற் உரத்தை வாங்கிப்

Thursday, 6 April 2023

பொதுவுடமை, ஒரு சிந்தனாவாதம் மட்டுமே…!

கம்யூனிச கொள்கைளின் கேள்வி ஞானத்திலே, பொதுவுடமை சித்தாந்தம் பற்றி, முழுதாக ஒரு புத்தகத்தையேனும் படிக்காத பலர், கம்யூனிச ஆட்சி நடக்காத நாடுகளிலே, முதலாளித்துவம் வழங்கிய சுகபோக வாழ்வு வாழ்ந்து கொண்டு, தீவிர கம்யூனிசம் பேசுவதை நான் கண்டிருக்கிறேன். கம்யூனிசம் பேசுதல் ‘புத்திஜீவி’தத்தனத்தை அடையாளப் படுத்துவதாக அவர்கள் நினைக்கிறார்களோ என நான் நினைப்பதும் உண்டு.

சோசலிஷ நாடொன்றில் நான் கல்வி கற்ற காலங்களில், மாற்றுக் கருத்துடன் அங்கே வாழ்ந்த கிழக்கு ஜேர்மன் பேராசிரியர் அடிக்கடி சொல்லும் வாக்கியம் ஒன்று இன்றும் மனதில் நிக்கிறது. ‘சோசலிஷம், கம்யூனிசம் பேசும் பலருக்கு பணத்தையும் பதவியையும் கொடுத்துப்பாருங்கள், மறுகணமே அவர்கள் முதலாளித்துவம் பேசத்துவங்கி விடுவார்கள். பொதுவுடமை ஒரு சிந்தனாவாதம் மட்டும்தான். நடைமுறைக்கு உதவாது’ என்பது பேராசிரியரின் நம்பிக்கை. ‘ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது’ என்கிற நம்மவர் பழமொழியை அவர் அநுசரித்துப் பேசுவார்.

சோசலிஷம் பேசிய நாடுகள் இன்று சின்ன பின்னப்பட்டுப் போனதுக்கும், முதலாளித்துவ முறைகளைப் பின் பற்றி இப்போது அவை வீறுநடை போடுவதற்கும் காரணம் என்ன? நடை முறையில் அவை தோற்றுப்போனதற்கு பேராசிரியர் சொன்னது மட்டுமே காரணமாகுமா? சித்தாந்தங்களிலும் பார்க்கச் சிக்கலானவை நடைமுறைகள் என்பதை, நான் ஜேர்மனியில் வாழ்ந்த காலத்தில் அநுபவ வாயிலாக அறிந்துகொண்டேன்.

Wednesday, 8 March 2023

மரங்களும் நண்பர்களே!

பேராசிரியர் ஆசி கந்தராஜா.

மனிதர்கள் மட்டுமல்ல, மரம் செடி கொடி பூண்டு யாவும் எமது நண்பர்களே.


எங்கள் ஊருக்கு அப்போது மின்சாரம் வரவில்லை. துலாக் கிணறு, அரிக்கன் லாம்பு, விறகடுப்புடன்தான் வாழ்க்கை. நாங்கள் குடியிருந்த காணி, ஒரு சொரியல் காணி. அடி வளவிலுள்ள துலாக் கிணறும் சொரியல் கிணறுதான். இது அயல் வீட்டாருக்கும் சொந்தமானதால், குளிக்கிற தண்ணி எந்த வாய்க்காலில் பாய்வதென்பதில் சண்டைவரும். எங்களுடன் வாழ்ந்த ஆச்சி, அம்மாவின் அம்மா, வலு கெட்டித்தனமாக இதைச் சமாளிப்பார். அவர் ஒரு கைம்பெண். எத்தனையோ விஷயங்களைத் தனித்து நின்று சமாளித்ததால் வைரம் பாய்ந்த மனுஷி. வெற்றி தோல்விகளை யதார்த்தமாக எடுத்துக் கொள்ளும் பக்குவத்தை ஆச்சியிடம்தான் கற்றுக்கொள்ள வேணும். இப்படிப்பட்ட ஆச்சியின் வழி காட்டலில் நாங்கள் கூட்டுக் குடும்பமாகக் குடியிருந்தோம்.

Saturday, 31 December 2022

சீன நாட்டு அரிசியும் பிளாஸ்டிக் சலசலப்பும்.

- ஆசி கந்தராஜா -

பிளாஸ்டிக்கில் அரிசி செய்வது சாத்தியமா? பிளாஸ்டிக் அரிசி, உண்மையான அரிசிபோல கொதி தண்ணீரில் வேகுமா? என்ற பல கேள்விகள் எமக்குள் எழுந்தாலும் பிளாஸ்டிக் என்றவுடன் எமக்குள் ஒருவித பயம் ஏற்படவே செய்கிறது. 'பிளாஸ்டிக் அரிசி' பற்றிய பல யூ-டியூப் வீடியோக்களும் தகவல்களும் அண்மைக் காலமாக ஊடகங்களிலும் வலைத் தளங்களிலும் வெளிவந்துள்ளன. சமீபத்தில் நான் பார்த்த, சீன மொழியில் விளக்கம் சொல்லும், ஒரு யூ-டியூப் வீடியோவின் முதலாவது காட்சியில், மெல்லிய பிளாஸ்டிக் தகடுகள் இயந்திரம் ஒன்றுக்குள் போடப்படுகிறது. அடுத்து நூல்கள் போன்ற அமைப்பு ஒரு இயந்திரத்திலிருந்து இன்னொரு இயந்திரத்துக்குப் போவது காண்பிக்கப்படுகிறது. மூன்றாவது காட்சியில் இயந்திரத்திலிருந்து அரிசி வெளியேறுகிறது. ஆனால் இந்த மூன்று காட்சிகளுக்குமான தொடர்புகள் எதுவும் அங்கு காட்டப்படவில்லை.


பிளாஸ்டிக் அரிசிசந்தைக்கு வந்திருப்பதாகச் சொல்வது முற்றிலும் புரளிக் கதை. 2011-ஆம் ஆண்டு வியட்நாமிய இணையப் பத்திரிகை ஒன்றுதான் முதன்முதலில் பிளாஸ்டிக் அரிசி சந்தைக்கு வந்திருப்பதாகவும், அது சீனாவில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் செய்தி வெளியிட்டது. அதன் பின்னர், பிளாஸ்டிக் அரிசி குறித்து வெளிவந்த செய்திகள் அனைத்துமே வியட்நாமிய இணையப் பத்திரிகை வெளியிட்ட செய்தியைச் சார்ந்தே இருந்தன.

சீனாவில் வுச்சாங் என்னும் இடத்தில் விளையும் அரசி மிகப் பிரபல்யமானது. இது நல்ல சுவையும் மணமும் கொண்டது. இந்த அரிசி அவியும்போது வெளிவரும் வாசைன பசியைத் தூண்டும் என்றும் சொல்லப்படுகிறது. வுச்சாங் அரிசி, அதிக விலையானதால், வியாபாரிகள் கலப்படம் செய்வதாகவும் அதனுடன் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட போலி அரிசியை கலப்பதகவும் வியட்நாமிய பத்திரிகை மேலும் தெரிவித்தது. இந்த கலப்பட அரிசியானது உருளைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு போன்ற மாச்சத்துள்ள கிழங்குகளை அரைத்து, அரிசி போன்று செய்யப்படுவதாகவும் இரசாயனங்களைப் பூசி அவை விற்கப்படுவதாகவும் சொல்லப்பட்டது. சீனாவின் புகழ்பெற்ற 'வுச்சாங்'ரக அரிசியைப் போன்று தோற்றமளிக்க கலப்பட ரக அரிசிகளில் வாசனைத் திரவங்கள் தெளிக்கப்படுவதாகவும் பின்னர் செய்திகள் வெளிவந்தன. ஆனால் எந்த செய்தியிலும் நேரடியாக பிளாஸ்டிக் கலக்கப் பட்டதாகத் தகவல்கள் இல்லை.

Wednesday, 2 November 2022

 ஆசி கந்தராஜாவின் பணச்சடங்கு: எம். ஏ. நுஃமான்.

ஆசி கந்தராஜாவின் புனைகதைகள்.



சி கந்தராஜா இன்றைய ஈழத்து புலம்பெயர் எழுத்துலகில் மிக முக்கியமான ஆளுமைகளுள் ஒருவர். ஜேர்மனிஜப்பான்அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தாவரவியல் விவசாயத் துறையில் கல்விகற்றவர். உலகின் பல்வேறு நாட்டுப் பல்கலைக் கழகங்களில் கற்பித்தவர். விவசாயத்துறை ஆலோசகராகப் பணியாற்றியவர்ஏராளமான சர்வதேச ஆய்வரங்குகளில் கலந்துகொண்டவர். அவ்வகையில் சர்வதேச அளவில் அறியப்பட்டஅங்கீகாரம் பெற்ற ஓர் அறிவியல் அறிஞர்பூங்கனியியல்உயிரியல் தொழில்நுட்பத்துறைப் பேராசிரியர். கடந்த சுமார் முப்பது ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவருபவர். இத்தகைய பின்புலமும்படைப்பாற்றலும் உள்ள ஒருவரின் தமிழ் இலக்கியத் துறைப் பிரவேசம் தற்காலத் தமிழ் இலக்கியத்துக்கு ஒரு புதிய வளமும் வனப்பும் தந்திருக்கிறது என்பதில் ஐயம் இல்லை.

தமிழ் இலக்கியத்தில் புனைகதைபுனைவுக் கட்டுரை ஆகிய இரு துறைகளில் அவர் கால் பதித்திருக்கிறார். புனைகதைத் துறையில் பாவனை பேசலன்றிஉயரப் பறக்கும் காகங்கள்கள்ளக் கணக்கு  ஆகிய சிறுகதைத் தொகுதிகளும்கீதையடி நீ எனக்கு என்னும் குறுநாவல் தொகுதியும் ஏற்கனவே வெளிவந்துள்ளன. கறுத்தக் கொழும்பான்செல்லப் பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய் என்பன இவரது புனைவுக் கட்டுரைத் தொகுதிகள்.

புனைவுக் கட்டுரை என்ற தொடர் கந்தராஜா மூலமே பிரபலம் பெற்றிருக்கின்றது எனலாம். ஆங்கிலத்தில் இதனை இமஜினேற்றிவ் எஸ்ஸே (Imaginative Essay) என்பார்கள். நமது பாடசாலைக் கல்வியில் இதனைக் கற்பனைக் கட்டுரை என்போம். ஏதாவது ஒரு பொருள் பற்றி புனைந்து எழுதுவது இவ்வகைப்படும். இதில் உண்மையும் கற்பனையும் கலந்து இருக்கும். ஒரு பேனையின் கதைநான் ஜனாதிபதியானால்எனது சந்திரமண்டலப் பயணம் போன்ற தலைப்புகளில் நமது பள்ளிப்பருவத்தில் நாம் கட்டுரைகள் எழுதியிருப்போம். நவீன தமிழ் இலக்கியத்தின் தொடக்க காலத்திலிருந்தே புனைவுக் கட்டுரைகள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. பாரதியின் தராசுசிட்டுக்குருவி போன்றவற்றை உதாரணமாகச் சொல்லாம். புதுமைப்பித்தனின் திருக்குறள் குமரேசபிள்ளை பிறிதொரு உதாரணம்.

Tuesday, 6 September 2022

 

தமிழர்களின் அலைந்துழல்வுச் சித்திரங்கள்

அ. ராமசாமி

 

புலம்பெயர் இலக்கியங்கள் என்ற சொல்லாடல் கடந்த கால்நூற்றாண்டுக் காலமாகத் தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் தவிர்க்க முடியாத சொல்லாடலாக மாறியிருக்கிறது. இலக்கிய வகைமைப்பாட்டில் வரையறைகள் தேவையான ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்தச் சொல்லாடலின் வரவு தனி ஈழக்கோரிக்கைக்கான போராட்டங்கள், போர்கள், வெற்றிகள், தோல்விகள், அமைதிப் பேச்சுகள், மீறல்கள், உள்நாட்டுக்குள்ளேயே இடப்பெயர்வுகள், அகதி நிலை வாழ்க்கை என்பனவற்றோடு தொடர்பு பற்றி நிற்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி வெவ்வேறு நாடுகளுக்குப் பெயர்ந்தவர்களைப் பற்றிய பதிவுகளாகவும் இருப்பின் துயரங்களாகவும் எதிர்கொள்ளும் பண்பாட்டுச் சிக்கல்களின் விவரிப்புகளாகவும் எழுதப்பெற்ற கவிதைகளும் புனைகதைகளும் இப்போது தமிழின் புலம்பெயர் இலக்கியங்களாக அடையாளப் படுத்தப்படுகின்றன.

ஒரு நாட்டுக்குள் ஏற்பட்ட போர்களாலும் கடும்பஞ்சங்களாலும் பெருந்தொற்று நோய்களாலும் நாட்டின் எல்லைகளைக் கடந்துசெல்லும் வாழ்க்கையைக் குறித்த சொல்லாக ‘அலைந்துழல்வு’ – Diaspora – என்ற சொல் உருவாகி நிலைபெற்றதின் பின்னணியில் ஐரோப்பிய நாடுகள் இரண்டு உலகப்போர்களைச் சந்தித்த காரணிகள் இருந்தன. அதற்கு முன்பே ஐரோப்பிய நாடுகள் உலகெங்கும் உருவாக்கிய காலனிய வடிவத்தால் ஒரு நாட்டின் மனிதர்கள் இன்னொரு நாட்டிற்குள் குடியமர்த்தப்பட்ட பெரும் நிகழ்வுகளும் நடந்தன. அப்பெருநிகழ்வுகளைக் குறிக்கும் சொல்லாடலாகவும் ‘அலைந்துழல்வு’ இருக்கிறது. இந்திய, இலங்கைத் தமிழ் மனிதர்கள் பிரிட்டானியக் காலனியவாதிகளாலும் ஒல்லாந்து காலனியாட்சியாளர்களாலும் வெவ்வேறு நாடுகளுக்குப் பெயர்க்கப்பட்டு உடல் உழைப்புத் தொழிலாளிகளாக ஆக்கப்பட்ட வரலாறும் நிகழ்வுகளும் அவ்வப்போது புனைகதைகளாக ஆக்கப்பட்டுள்ளன. ப.சிங்காரம், ஹெப்சிபா ஜேசுதாசன் போன்றவர்களின் நாவல்களும் ஜெயந்திசங்கர் போன்றவர்களின் சிறுகதைகளும் அப்படியான வகைப்பாட்டில் நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன. அதன் தொடர்ச்சியில் அண்மையில் வந்த இரண்டு நாவல்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் எழுதப்பெற்றுள்ளன.

Thursday, 11 August 2022

ஆர்மேனியர்களும் இலங்கைத் தமிழர்களும்.

'தலைமுறைதாண்டிய காயங்கள்' என்னும் சிறுகதையை முன்னிறுத்தி, எனது பார்வை. 

- ரஞ்ஜனி சுப்ரமணியம் -


புனைவிலக்கியம் என்பது வெறும் எண்ணங்களின் அழகியல் வடிவம் மட்டுமே சார்ந்ததல்ல. அதில் அறிவின் தேடுதலும் இணைந்தே அமைந்திருந்தால் வாசிப்பனுபவத்தின் பெறுமதியை நிச்சயம் மேலோங்கச் செய்யும்.  

இவ்வகையான நியாயமான எண்ணங்கள் உள்மன ஓரத்தில் எட்டிப் பார்க்கும் போதெல்லாம்,  ஆசி கந்தராஜா அவர்களின் படைப்புகள் என் நினைவில் தோன்றும். அவரது கதைகளை நான் அதிகம் வாசித்திருக்கிறேன் என்பது ஒரு காரணமாக இருந்தாலும், அவ்வாறு வாசிக்கத் தூண்டும் ஆர்வத்தை அது நிச்சயம் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு வரலாறு ஆவணப்படுத்தலாக மட்டுமே முன்வைக்கப் படுவதை விட, புனைவின் சிறப்பும், சுவாரசியமும் சேரும் போது வாசகனின் உள்வாங்கல் அதிகரிக்கிறது, நினைவிலும் நிலைக்கிறது.

இவரது படைப்புகள், புனைவுகள் மட்டுமே அல்ல. வரலாற்றுத்  தளம்கொண்ட உண்மைகள் மட்டுமேயும் அல்ல. இவற்றில் பெரும்பாலானவை தமது விரிவுரைகள் நிமித்தம் சென்ற பல்வேறு தேசங்களில் அவர் சந்தித்த மனிதர்களின் நிஜவடிவம் சார்ந்த புனைவுகளே என்பது படைப்பாளியுடனான உரையாடல்களின் மூலம் நான் அறிந்தது. ஒரு ஆத்மார்த்த வாசகனுக்குப் புரியும், படைப்பாளியி்ன் நிஜங்கள் எங்கெங்கே வெளிப்படுகின்றன என்பது. அவர் சென்று வந்த தேசங்களின் மனிதர்கள், சரித்திரம், கலாசாரம் என்பவற்றில் முக்கியமான அம்சங்கள் கதைகளில் பரந்திருக்கின்றன.

Monday, 14 March 2022

புனைகதை வெளியில் புதிய எல்லையைத்  தொடும்

பேராசிரியர் ஆசி கந்தராஜாவின் பணச்சடங்கு

 


றிவியலுடன் உலகளாவிய தனதனுபவங்களையும் கலந்து வித்தியாசமான தளங்களில் நின்று புதிய புனைவு மொழியிலும், உத்திகளிலும் கதை சொன்ன முறைமையில் இன்றைய எழுத்தாளர்களுள் மிக முக்கியமானவராக முதற் சிலருள் வைத்துப் போற்றத்தக்கவராக ஆசி கந்தராஜா திகழ்கிறார். பூங்கனியியல், உயிரியல்  தொழில்நுட்பத்துறைப் பேராசிரியர், அறிவியல் அறிஞர், விவசாயத்துறை ஆலோசகர், அனுபவமிக்க மின்னியல் ஊடகவியலாளர், எழுத்தாளர் என ஆசி கந்தராஜா பல்துறைகளிலும் பிரகாசிப்பினும் அவரை ஜனரஞ்சகப் படுத்தியது எழுத்தாளர் எனும் அவரது பேராளுமை தான் எனத் துணிந்து கூறலாம்.

எழுத்தாளர் எனும் வகையில் கதைஞராக, புனைவாளராக, நாவலாசிரியராக, கட்டுரையாளராக ஆசி செயலியற்றி வருகிறார். அறிவியலை குறிப்பாக பூங்கனியியலை முன்னிறுத்தி ஆசி புனையும் கட்டுரைகளில் அறிவியல் சார்ந்த தகவல்கள் அவருடைய சித்திரிப்பு ஆற்றலுடன் செம்பாதியாய் கலந்திருக்கும். ஆனால் அவரது புனைவுகளிலோ ஆசிரியரின் திறனானது அவரது சித்திரிப்பு ஆற்றலுக்கு அப்பாலும் பல தளங்களிலும் வியாபித்து மானுட உறவு நிலைகளையும் உணர்வுகளையும் அற்புதமாக வெளிப்படுத்துவதாக அமையும்.

புனைகதைஞராய் நின்று ஆசி படைத்த இலக்கியங்கள் சர்வ தேசிய மாற்றங்களின் போக்கிற்கேற்ப இயைந்திருந்து அவரை ஒரு தவிர்க்க முடியாத எழுத்தாளராக சிறுகதையைப் புத்தாக்கம் செய்யும் பிதாமகர்களில் ஒருவராக நிலைநிறுத்தின எனலாம். அந்த வகையில் 'பாவனை பேசலின்றி' (2000) உயரப் பறக்கும் காகங்கள் (2003) போன்ற அவரது சிறுகதைத் தொகுப்புகளும் அதில் உள்ளடங்கி யிருந்த கதைகளும் இலக்கியவெளியில் பெரிதும் பேசப்படலாயின. இந்த இரு நூல்களைத் தவிர 2018 இல் ஆசியின் தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுப்பானது 'கள்ளக்கணக்கு' எனும் பெயரில் அறுவடையானது. 'பாவனை பேசலின்றி' சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான இலங்கை அரசின் இலக்கிய விருதினைத் தனதாக்கியிருந்தமையும், 'கள்ளக்கணக்கு' நூலானது தமிழக அரசின் உலகத் தமிழ்ச்சங்க விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருது என இரட்டை விருதுகளைப் பெற்றிருந்தமையும் இவரது புனைவாற்றலுக்குக் கிடைத்த பேரங்கீகாரங்கள் எனக் கொள்ளலாம். அறிவியல் சார் தகவல்களையும் புனைவின் கூறுகளையும் கலந்து  புதுவித மொழிநடையுடனும் அங்கதச் சுவையுடனும் தன் கதைகளை அவர் நகர்த்தும் பாங்கு அவருக்கேயுரியது. இப் பண்பினாலேயே பெரும்பாலான வாசகர்களாலும் விமர்சகர்களாலும் அ.முத்துலிங்கம் அவர்களுடன் ஆசி பொருத்திப் பார்க்கப் படுகிறார்.

ஆசியின் அல்புனைவுகள் அறிவியல் சஞ்சிகைகளுக்கு நிகரானவை. விஞ்ஞானியான போதிலும் வித்துவத்துடன் அவற்றினைப் புனையாது விவசாயஞ் செய்பவர்களாலும் அறிவியல் பிரஞ்ஞை அற்றவர்களாலும் புரிந்துணரத்தக்க வகையில் தனது கட்டுரைகளை அவர் வடிவமைத்திருப்பார். நீண்ட காலப் பயிர்களை குறுகிய காலத்துள் மகசூல் தரவைப்பது அயன மண்டலப் பயிர்களை  அவுஸ்திரேலியாவிலும் பயிரிட்டு அறுவடை காண்பது ஒட்டு வைத்தும் பதிவைத்தும் பயிர்களில் மிகுந்த பலனைக் கொள்வது என பயிர்கள் தொடர்பிலான ஆராய்ச்சிகளையும், பூங்கனியியல் அபிவிருத்தியினையும் இலக்கியமாக்கி

Sunday, 30 January 2022

ஆர்மேனியர்களும் இலங்கைத் தமிழர்களும்.

'தலைமுறைதாண்டிய காயங்கள்' என்னும் சிறுகதையை முன்னிறுத்தி, எனது பார்வைகள்.

- ரஞ்ஜனி சுப்ரமணியம் -

  


புனைவிலக்கியம் என்பது வெறும் எண்ணங்களின் அழகியல் வடிவம் மட்டுமே சார்ந்ததல்ல. அதில் அறிவின் தேடுதலும் இணைந்தே அமைந்திருந்தால் வாசிப்பனுபவத்தின் பெறுமதியை நிச்சயம் மேலோங்கச் செய்யும்.  இவ்வகையான நியாயமான எண்ணங்கள் உள்மன ஓரத்தில் எட்டிப் பார்க்கும் போதெல்லாம்ஆசி கந்தராஜா அவர்களின் படைப்புகள் என் நினைவில் தோன்றும். அவரது கதைகளை நான் அதிகம் வாசித்திருக்கிறேன் என்பது ஒரு காரணமாக இருந்தாலும், அவ்வாறு வாசிக்கத் தூண்டும் ஆர்வத்தை அது நிச்சயம் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு வரலாறு ஆவணப்படுத்தலாக மட்டுமே முன்வைக்கப் படுவதை விட, புனைவின் சிறப்பும், சுவாரசியமும் சேரும் போது வாசகனின் உள்வாங்கல் அதிகரிக்கிறது, நினைவிலும் நிலைக்கிறது.

இவரது படைப்புகள், புனைவுகள் மட்டுமே அல்ல. வரலாற்றுத்  தளம்கொண்ட உண்மைகள் மட்டுமேயும் அல்ல. இவற்றில் பெரும்பாலானவை தமது விரிவுரைகள் நிமித்தம் சென்ற பல்வேறு தேசங்களில் அவர் சந்தித்த மனிதர்களின் நிஜவடிவம் சார்ந்த புனைவுகளே என்பது படைப்பாளியுடனான உரையாடல்களின் மூலம் நான் அறிந்தது. ஒரு ஆத்மார்த்த வாசகனுக்குப் புரியும், படைப்பாளியி்ன் நிஜங்கள் எங்கெங்கே வெளிப்படுகின்றன என்பது. அவர் சென்று வந்த தேசங்களின் மனிதர்கள், சரித்திரம், கலாசாரம் என்பவற்றில் முக்கியமான அம்சங்கள் கதைகளில் பரந்திருக்கின்றன.

கதைக்களங்கள் வெறும் புறவய சித்தரிப்புகள்தானே என மேலோட்டமாகக் கடந்துவிட முடியாதபடி, அவற்றால் உருவாகும் தாக்கமே கேள்விகளின் திறவுகோலாக அமைவதால்குறையாக  உறுத்துவதில்லை. மாறாக வாசகரின் சிந்தனையைத் தூண்டி அகத்தேடலுக்கும், புறத்தேடலுக்கும் களம் அமைக்கும் வழி காட்டியாகவே அமைகிறது. வாசிப்பின் முடிவில், வாசகர் தமது உணர்வு வெளிப்பாட்டை தானாகச் சென்றடைதலே ‘ஆசி’யின் எழுத்தின் சிறப்பம்சம் எனவும் உணரப்படும். அதுவே படைப்பாளியின் வெற்றி.

அவ்வாறான சிறப்புப் பெற்ற புனைவுகளில் உலகளாவிய ரீதியில் பல்வேறு ஒடுக்குமுறைகளையும், இனபேதத்தின் வடிவங்களையும், இனமதமொழி சார்ந்த மனிதப் படுகொலைகளையும் மூலச்சரடாகக் கொண்ட அவரது படைப்புகள் பலவற்றை இனம் காணலாம். தலைமுறை தாண்டிய காயங்கள், கையதுகொண்டு மெய்யது பொத்தி, விலாங்குமீன்கள், எதிரியுடன் படுத்தவள், தூதர்கள், அசைல், நரசிம்மம், கிழக்கும்மேற்கும், யாவரும் கேளிர், மைனாக்கள், சூக்குமம் ஆகியன சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன.

சிரிய அதிபரின் ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டங்கள், பின்னாளில் ஒரே மதத்தின் உட்பிரிவுகளான சுனி, ஷியா முஸ்லிம்களின் முரணாகவும், தீவிரவாதிகளின் பட்டறையாகவும் உருமாறின. ஆதிக்க நாடுகளின் அனுசரணையுடன் பெரும் உள்நாட்டுப் போராக தோற்றம் பெற்றது. கணக்கற்ற உயிரிழப்புகளும், அண்டை நாடுகளுக்கான அகதிகள் இடம்பெயர்வுமாக பல லட்சங்கள் தாண்டிய அவலமும் அண்மைய வரலாறு. பிஜியின் கரும்புத் தோட்டங்களுக்கும், இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்கும் இந்தியாவிலிருந்து வேலைக்காக அழைத்து  வரப்பட்ட இந்திய மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களும், ஒடுக்குமுறைகளும் சில நூற்றாண்டுகள் கடந்த வரலாறு. இலங்கையின் இன ஒடுக்குமுறைகளும், இறுதிப்போரும், அகதி வாழ்வும் எமது தாயக வரலாறு. இவையெல்லாம் ஆசியின் படைப்புகள் சிலவற்றின் கதைக்களங்கள். இப்படைப்புகளின் இறுதியில் பல கேள்விகள் உருவாவதும், பதில் சொல்ல வேண்டிய கடப்பாடுகளை வாசகரிடம் தோற்றுவித்தலும் அறிவுசார் இலக்கியரசனைக்கு  உரியது. இதில் 'தலைமுறை தாண்டிய காயங்கள்' மனதில் பதிந்ததும் அல்லாமல் சில பதற்றங்களையும் ஏற்படுத்தியது. காரணம் உள்ளார்ந்த உணர்வு நிலைகளின் ஒத்திசைவும் சில முரண்களும். தொடரும் உரையாடல் இச்சிறுகதையின் மனதுக்கு வலி தரும் அழுத்தமான பகுதி.

Saturday, 22 January 2022


கோளமயமாதல்

ஆசி கந்தராஜா

ளமைக்கால இலக்கிய நண்பன் ஒருவனை, பல்கலைக்கழக பணி நிமித்தமாக நான் கிழக்கு ஆபிரிக்க நாடொன்றுக்கு சென்றிருந்த பொழுது சந்தித்தேன். நான் தங்கியிருந்த ஹோட்டலின் நிதிக் கட்டுப்பாட்டாளராக பணிபுரிவதாக அவன் சொன்னான். கல்லூரி நாட்களில் அவனும் நானும் பல ஆக்க இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வாழ்ந்தோம். பிற மொழி இலக்கியங்களை அவன் நிறையவே வாசிப்பான். மரபுகள் மீறப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பது அவன் கொள்கை. இது சம்பந்தமாக பலதடவைகள் அவன் கல்லூரி நண்பர்களுடன் முரண்பட நேர்ந்ததும் உண்டு.

இலங்கையில் நடந்த இனக்கலவரம், அதைத் தொடர்ந்த போராட்டம், புலம் பெயரும் நிர்ப்பந்தம் போன்ற பல்வேறு காரணிகளால் நாம் இருவரும்  வெவ்வேறு திசைகளில் பயணித்து விட்டோம். இப்போது இருண்ட கண்டத்தின் நாடொன்றிலே எதிர்பாராத சந்திப்பு.

பிறந்த மண்ணைத் தொலைத்துப் புதிய வாழ்க்கை தேடும் எலியோட்டத்திலே, இலக்கியச் சிந்தனைகளைத் தான் தொலைத்துவிட்டதாகச் சொல்லி வருத்தப்பட்டான். அங்கு நிற்கும்வரை இரவுச் சாப்பாட்டுக்கு தனது வீட்டுக்கு வருமாறும் அன்புக் கட்டளையிட்டான்.

ஹோட்டல் வளவுக்குள்ளேயே நண்பனுக்கு வீடொன்றை ஒதுக்கியிருந்தார்கள். நண்பனின் வீட்டில் பீட்டர் என்ற சுதேசி இளைஞன் குடும்பத்தில் ஒருவனாக வளையவந்தான். அவனே நண்பனின் அலுவலக உதவியாள், சாரதி, வீட்டு வேலைக்காரன் எனச் சகலகலா ஊழியன். இட்லி, தோசை, சப்பாத்தி முதல்கொண்டு இந்திய உணவுவகைகளை சுவையாகச் சமைப்பான் என நண்பனின் மனைவி சொன்னார். விசுவாசம் என்பதின் அர்த்தத்தை அவனிடம் இருந்துதான் நாம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று பீட்டருக்கு நற்சான்றிதழ் வழங்கினான் என் நண்பன்.

இரவுச் சாப்பாடு முடிந்ததும் பலதும் பத்தும் பேசிக் கொண்டிருந்தோம். ஆபிரிக்க இலக்கியம், எழுத்தாளர்கள், அங்கு வாழும் 'ட்ரைபல்' இனங்களின் பழக்கவழக்கங்கள் பற்றிக் கலந்துரையாடும்போது பீட்டர் பற்றி பேச்சுத்திரும்பியது.